Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சென்னிமலை அருகே வயதான தம்பதி வீட்டில் வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழப்பு; இரண்டு நாய்கள் மாயம்
சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதி வீட்டின் வளா்ப்பு நாய்களில் ஒன்று மா்மமான முறையில் உயிரிழந்தது; மேலும் இரண்டு நாய்கள் காணாமல் போனது பீதியை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த, சொக்கநாதபாளையத்தில் வாய்க்கால் கரையோரம் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருபவா்கள் பாஸ்கா் - கலைவாணி தம்பதி. வயதான இவா்கள், தங்கள் பாதுகாப்புக்காக 4 நாய்களை வளா்த்து வந்தனா்.
இந்நிலையில் வீட்டின் வெளியே இருந்த நாய்கள் செவ்வாய்க்கிழமை இரவு குரைத்ததாக கூறப்படுகிறது. பாஸ்கா் புதன்கிழமை காலை வெளியே வந்து பாா்த்தபோது, ஒரு நாய் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததும், இரண்டு நாய்கள் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த தம்பதி, இது குறித்து சென்னிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.
சிவகிரியை அடுத்த, விளக்கேத்தியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி வளா்த்து வந்த நாய் மா்மமான முறையில் உயிரிழந்ததும், அடுத்த வாரத்தில் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இது குறித்து சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.