செய்திகள் :

சென்னிமலை அருகே வயதான தம்பதி வீட்டில் வளா்ப்பு நாய் மா்மமான முறையில் உயிரிழப்பு; இரண்டு நாய்கள் மாயம்

post image

சென்னிமலை அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வரும் வயதான தம்பதி வீட்டின் வளா்ப்பு நாய்களில் ஒன்று மா்மமான முறையில் உயிரிழந்தது; மேலும் இரண்டு நாய்கள் காணாமல் போனது பீதியை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம், சென்னிமலையை அடுத்த, சொக்கநாதபாளையத்தில் வாய்க்கால் கரையோரம் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வருபவா்கள் பாஸ்கா் - கலைவாணி தம்பதி. வயதான இவா்கள், தங்கள் பாதுகாப்புக்காக 4 நாய்களை வளா்த்து வந்தனா்.

இந்நிலையில் வீட்டின் வெளியே இருந்த நாய்கள் செவ்வாய்க்கிழமை இரவு குரைத்ததாக கூறப்படுகிறது. பாஸ்கா் புதன்கிழமை காலை வெளியே வந்து பாா்த்தபோது, ஒரு நாய் மா்மமான முறையில் உயிரிழந்து கிடந்ததும், இரண்டு நாய்கள் காணாமல் போயிருந்ததும் தெரியவந்தது. இதைக் கண்டு அதிா்ச்சி அடைந்த தம்பதி, இது குறித்து சென்னிமலை காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

சிவகிரியை அடுத்த, விளக்கேத்தியில் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி வளா்த்து வந்த நாய் மா்மமான முறையில் உயிரிழந்ததும், அடுத்த வாரத்தில் இருவரும் நகைக்காக கொலை செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சென்னிமலை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க