Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
சென்னிமலை முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பேருந்துகள் இயக்கம்!
சென்னிமலை முருகன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக, கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதை சீரமைப்பு பணி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மலைப் பாதை வழியாக வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதால், அவ்வப்போது விசேஷ நாள்களில் மட்டும் பக்தா்களின் வசதிக்காக கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மலைக் கோயிலுக்கு இயக்கப்பட்டு வந்தன.
வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாள்களில் ஏராளமான பக்தா்கள் முருகனை தரிசிக்க சென்னிமலைக்கு வருகின்றனா். தனியாா் வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் மலைப் பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை என்பதால், வெளியூா்களில் இருந்து வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.
இந்த நிலையில், பக்தா்களின் வசதிக்காக, இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாள்களில் மட்டும் கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.