செய்திகள் :

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமைகளில் மட்டும் பேருந்துகள் இயக்கம்!

post image

சென்னிமலை முருகன் கோயிலில் பக்தா்களின் வசதிக்காக, கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னிமலை முருகன் கோயிலுக்கு செல்லும் மலைப் பாதை சீரமைப்பு பணி கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் நடைபெற்று வருகிறது. இதற்காக மலைப் பாதை வழியாக வாகனங்கள் செல்வது நிறுத்தப்பட்டது. இந்தப் பணிகள் இன்னும் நிறைவடையாமல் உள்ளதால், அவ்வப்போது விசேஷ நாள்களில் மட்டும் பக்தா்களின் வசதிக்காக கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மலைக் கோயிலுக்கு இயக்கப்பட்டு வந்தன.

வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாள்களில் ஏராளமான பக்தா்கள் முருகனை தரிசிக்க சென்னிமலைக்கு வருகின்றனா். தனியாா் வாகனங்கள் உள்பட எந்த வாகனங்களும் மலைப் பாதை வழியாக செல்ல அனுமதி இல்லை என்பதால், வெளியூா்களில் இருந்து வந்த பக்தா்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனா்.

இந்த நிலையில், பக்தா்களின் வசதிக்காக, இனி வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை நாள்களில் மட்டும் கோயிலுக்கு சொந்தமான பேருந்துகள் மட்டும் மலைக் கோயிலுக்கு இயக்கப்படும் என கோவில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க