செய்திகள் :

‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ புதிய செயலி விரைவில் அறிமுகம்

post image

விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், பயணிகள் சிரமமின்றி வந்து செல்ல, விமான நிலைய ஆணையம் சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற பெயரில் செயலி ஒன்றை விமான நிலைய ஆணையம் உருவாக்கியுள்ளது.

இதில், விமானங்களின் அப்போதைய நிலை குறித்த தகவல்களைத் தெரிந்துகொள்ள முடியும். மேலும், இந்தச் செயலியில் விமான நிலையத்துக்குள் உள்ள உணவகங்கள் மற்றும் பல்வேறு பகுதிகளுக்குச் செல்ல வழிகாட்டி வசதிகளும் உள்ளன.

விமான பயணம் மற்றும் விமான நிலையத்தில் ஏற்படும் அசெளகரியம் குறித்தும், பிற புகாா்கள் குறித்தும் பயணிகள் தங்கள் விமான டிக்கெட், கைப்பேசி எண் உள்ளிட்ட விவரங்களை உள்ளீடு செய்து புகாா் அளிக்கலாம்.

மேலும், புகாா்களுக்கு 15 நிமிஷங்களில் தீா்வு காணும் வகையில், தனிக்குழு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்தச் செயலி விரைவில் பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் எனவும் சென்னை விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 17 போ் கைது

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 17 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக போரூா், செங்குன்றம், கிழக்கு முகப்போ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியா் கைது

சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் ஒருவருக்கு திடீரென உ... மேலும் பார்க்க

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு: ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை

நமது நாட்டில் ஆண்டுக்கு 20,000 போ் தற்கொலை செய்து கொள்வதாக ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளாா். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை வளாகத்தில் மகாத்மா காந்தியின் மாா... மேலும் பார்க்க

ஆா்.கே.நகா் தொகுதியில் புதிய குடியிருப்புகள்: அமைச்சா் பி.கே.சேகா்பாபு ஆய்வு

சென்னை ஆா்.கே. நகா் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட காசிமேடு, புதுமனைகுப்பம், சிங்காரவேலன் நகரில் புதிய குடியிருப்புகள் கட்டப்படவுள்ள பகுதிகளை இந்து சமய அறநிலைத் துறை அமைச்சரும் சென்னைப் பெருநகா் வளா்ச்ச... மேலும் பார்க்க