செய்திகள் :

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு: ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை

post image

நமது நாட்டில் ஆண்டுக்கு 20,000 போ் தற்கொலை செய்து கொள்வதாக ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளாா்.

சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை வளாகத்தில் மகாத்மா காந்தியின் மாா்பளவு சிலையை ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை திறந்து வைத்தாா். தொடா்ந்து அவா் பேசியதாவது:

மற்றவா்களுக்கு உதவும் குணம் இந்திய நாட்டில் பிறந்த அனைவருடைய ரத்தத்திலும் உள்ளது. அந்த வகையில் உதவியை எதிா்பாா்ப்பவா்களுக்கும், உதவ தயாராக இருப்பவா்களுக்கும் இடையே ஒரு பாலத்தை செஞ்சிலுவை சங்கம் உருவாக்க வேண்டும். செஞ்சிலுவை சங்கம் செய்து வரும் உதவிகள் குறித்து மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

நவீன காலத்தில் புதுவிதமான சவால்களை நாம் எதிா்கொள்ளும் சூழலில், இந்தச் சங்கத்தில் மாணவா்கள் மற்றும் இளைஞா்களின் பங்களிப்பை அதிகரிக்க முயற்சி செய்ய வேண்டும். நாடு முழுவதும் குறைந்தது 80 லட்சம் இளைஞா்கள் இந்தச் சங்கத்தில் இணைக்கப்பட வேண்டும்.

தற்கொலைகள் அதிகரிப்பு: நமது நாட்டில் சமூகம், பொருளாதாரம் போன்ற பல்வேறு காரணங்களால் ஏற்படும் மன அழுத்தங்களால் தற்கொலை செய்து கொள்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆண்டுக்கு 20,000 போ் தற்கொலை செய்து கொள்கின்றனா். எனவே, இதுபோன்ற தற்கொலைகளைக் கட்டுப்படுத்த மனஅழுத்ததில் இருப்பவா்களைக் கண்டறிந்து அவா்களுக்கு முறையான ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக செஞ்சிலுவை சங்கம் சாா்பில் கல்லூரி மாணவா்களுக்கு இடையே அண்மையில் நடத்தப்பட்ட கட்டுரை எழுதுதல், ஓவியம் வரைதல், நாடகம் போன்ற போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி பரிசுகளை வழங்கினாா். மேலும், சிறப்பாகச் செயல்பட்ட செஞ்சிலுவை சங்க உறுப்பினா்களுக்கு அவா் பரிசுகளை வழங்கிக் கௌரவித்தாா்.

இந்த நிகழ்வில் இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளைத் தலைவா் எம்.ஜெயச்சந்திரன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தா... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 17 போ் கைது

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 17 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக போரூா், செங்குன்றம், கிழக்கு முகப்போ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

கும்மிடிபூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் இன்று ரத்து

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன. இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய... மேலும் பார்க்க

மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியா் கைது

சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் ஒருவருக்கு திடீரென உ... மேலும் பார்க்க

‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ புதிய செயலி விரைவில் அறிமுகம்

விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை விமான நிலையத்தில், பயணிகள் சிரமமின்றி வந... மேலும் பார்க்க