Ilaiyaraaja: "பவதாரிணியின் கடைசி ஆசை... இது உலகம் முழுதும் பரவும்" - இளையராஜா உர...
கும்மிடிபூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் இன்று ரத்து
பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
சென்னை கோட்டத்துக்குள்பட்ட பொன்னேரி, கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (பிப்.13) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அந்த நேரத்தில் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகா் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்.
பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 9, 10.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 9.30 மணிக்கு எண்ணூருக்கும், காலை 11.35 மணிக்கு மீஞ்சூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
மேலும், மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து சென்ட்ரலுக்கு காலை 11.42, பிற்பகல் 1.18, 3.33 மணிக்கும், எண்ணூரிலிருந்து சென்ட்ரலுக்கு பிற்பகல் 12.43 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து சென்ட்ரலுக்கு பிற்பகல் 2.59 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.
ரயில் ரத்து: ராமேசுவரம் (மண்டபம்) - ஹூப்ளி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு வாராந்திர விரைவு ரயில் (எண்: 07355/07356) மாா்ச் 22 முதல் ஏப்.27-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.