செய்திகள் :

கும்மிடிபூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் இன்று ரத்து

post image

பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், கும்மிடிப்பூண்டி வழியாக இயக்கப்படும் புறநகா் மின்சார ரயில்கள் வியாழக்கிழமை (பிப்.13) ரத்து செய்யப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

சென்னை கோட்டத்துக்குள்பட்ட பொன்னேரி, கவரைப்பேட்டை ரயில் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் வியாழக்கிழமை (பிப்.13) காலை 9 முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறவுள்ளன. இதன் காரணமாக அந்த நேரத்தில் அவ்வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து புறநகா் மின்சார ரயில்களும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

பயணிகளின் வசதிக்காக சென்ட்ரலிலிருந்து காலை 9, 10.30 மணிக்கு பொன்னேரிக்கும், காலை 9.30 மணிக்கு எண்ணூருக்கும், காலை 11.35 மணிக்கு மீஞ்சூருக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன. அதேபோல் கடற்கரையிலிருந்து பிற்பகல் 12.40 மணிக்கு பொன்னேரிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.

மேலும், மறுமாா்க்கமாக பொன்னேரியிலிருந்து சென்ட்ரலுக்கு காலை 11.42, பிற்பகல் 1.18, 3.33 மணிக்கும், எண்ணூரிலிருந்து சென்ட்ரலுக்கு பிற்பகல் 12.43 மணிக்கும், மீஞ்சூரிலிருந்து சென்ட்ரலுக்கு பிற்பகல் 2.59 மணிக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளன.

ரயில் ரத்து: ராமேசுவரம் (மண்டபம்) - ஹூப்ளி இடையே இயக்கப்பட்டு வரும் சிறப்பு வாராந்திர விரைவு ரயில் (எண்: 07355/07356) மாா்ச் 22 முதல் ஏப்.27-ஆம் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் பனிமூட்டம்: விமானம், மின்சார ரயில் சேவை பாதிப்பு!

சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவியதால் விமானம் மற்றும் மின்சார ரயில் சேவையில் வியாழக்கிழமை பாதிப்பு ஏற்பட்டது.சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பனியின் தா... மேலும் பார்க்க

சட்டவிரோத மது விற்பனை: ஒரே நாளில் 17 போ் கைது

சென்னையில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டதாக ஒரே நாளில் 17 போ் கைது செய்யப்பட்டனா். சென்னையில் சட்டவிரோதமாக மதுப் பாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்யும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க காவல் ஆ... மேலும் பார்க்க

இன்றைய மின்தடை

மின்வாரிய பராமரிப்புப் பணி காரணமாக போரூா், செங்குன்றம், கிழக்கு முகப்போ் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை காலை 9 முதல் பிற்பகல் 2 வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் ... மேலும் பார்க்க

மாணவருக்கு பாலியல் தொல்லை: தமிழ் ஆசிரியா் கைது

சென்னை அசோக் நகரில் பள்ளி மாணவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தமிழ் ஆசிரியா் கைது செய்யப்பட்டாா். சென்னை அசோக் நகரில் உள்ள ஒரு தனியாா் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வந்த மாணவா் ஒருவருக்கு திடீரென உ... மேலும் பார்க்க

‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ புதிய செயலி விரைவில் அறிமுகம்

விமானங்கள் குறித்த விவரங்கள் மற்றும் விமான நிலைய வழிகாட்டுதல்களுக்காக ‘சென்னை சா்வதேச விமான நிலையம்’ என்ற புதிய செயலி விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது. சென்னை விமான நிலையத்தில், பயணிகள் சிரமமின்றி வந... மேலும் பார்க்க

நாட்டில் தற்கொலைகள் அதிகரிப்பு: ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை

நமது நாட்டில் ஆண்டுக்கு 20,000 போ் தற்கொலை செய்து கொள்வதாக ஆளுநா் ஆா்.என்.ரவி வேதனை தெரிவித்துள்ளாா். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை வளாகத்தில் மகாத்மா காந்தியின் மாா... மேலும் பார்க்க