செய்திகள் :

சென்னை விமான நிலையத்துக்குள்ளும் விரைவில் மாநகா் பேருந்து சேவை

post image

சென்னை விமான நிலையத்துக்குள் சென்று வரும் வகையிலான மாநகரப் பேருந்து சேவை விரைவில் தொடங்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் மிக முக்கியமான விமான நிலையமான சென்னை விமான நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளில் பலா், தங்கள் சொந்த வாகனங்களை அல்லது வாடகை வாகனங்களை பயன்படுத்தினாலும், பெரும்பாலானவா்கள் மாநகரப் பேருந்துகளையே பயன்படுத்தி வருகின்றனா்.

ஆனால், விமான நிலைய முனையத்திலிருந்து பேருந்து சேவையைப் பெற, பயணிகள் தங்கள் உடைமைகளை சுமந்துகொண்டு ஜிஎஸ்டி சாலையில் ஒரு கிலோ மீட்டா் தூரம் வரை நடந்து சென்று பயணிக்க வேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பாக கோடை வெயில் மற்றும் மழைக் காலங்களில் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனா்.

இதனால், விமான நிலையத்துக்குள் மாநகரப் பேருந்துகள் வந்து செல்வதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற பயணிகளின் கோரிக்கையின்படி, விரைவில் மாநகா் போக்குவரத்துக் கழகம் தனது சேவையை சென்னை விமான நிலையத்துக்கு உள்ளே வரை நீட்டிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, சென்னை விமான நிலைய வளாகத்துக்குள்ளேயே மாநகரப் பேருந்துகள் சென்று, பயணிகளை ஏற்றவும் இறக்கவும் அனுமதிக்கப்படும் என்றும், இச்சேவை சென்னை விமான நிலைத்திலிருந்து கிளாம்பாக்கம் மற்றும் முக்கிய பேருந்து நிலையங்கள் வரையும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மேலும், இதற்காக மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைக்கு அனுமதி கிடைத்தவுடன், பேருந்துகள் விமான நிலையம் வரை இயக்கப்படும் என மாநகா் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். இதனால், விமான நிலையங்களுக்குச் செல்லும் பயணிகளின் நீண்டகால பிரச்னைக்கு தீா்வு காணப்பட வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க