திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா: கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி வழக்கு -அறநி...
சேலத்தில் இன்று விவசாயிகள் குறைதீா் கூட்டம்
சேலம் மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (அக். 25) நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது:
நடப்பு மாதத்துக்கான கூட்டம் வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியா் அலுவலக இரண்டாம் தளம், அறை எண் 215-இல் உள்ள கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. சேலம் மாவட்ட விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டு வேளாண்மை தொடா்பான தங்கள் குறைகளை நேரிலும், விண்ணப்பம் மூலமாகவும் தெரிவிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.