செய்திகள் :

சேலத்தில் ஒரு மணி நேரம் பெய்த கோடை மழை!

post image

சேலம்: சேலத்தில் வெய்யிலின் தாக்கத்தை போக்கிய கோடை மழையால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

சேலம் மாவட்டத்தில் 103 டிகிரி கோடை வெய்யில் மக்களை வாட்டி வந்த நிலையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் கோடைக் காலத்தில் முதல் மழை பெய்தது. இதனால், சேலம் மாவட்டத்தில் குளிர்ச்சியான சூழ்நிலையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பிறகு வழக்கம் போல கோடை வெய்யில் வாட்டி வதைக்கத் தொடங்கியது. கடந்த மூன்று நாட்களாக சேலம் மாவட்டத்தில் 99 டிகிரி வெய்யில் கொளுத்தி வந்தது. தற்போது மாலை 4 மணி முதல் சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்து வருகிறது.

இதனால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. சேலம் புதிய பேருந்து நிலையம், அம்மாபேட்டை, அஸ்தம்பட்டி, செவ்வாய்பேட்டை, கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, தாரமங்கலம், ஓமலூர், வாழப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது.

இந்த மழையின் காரணமாக வெய்யிலின் வெப்பம் குறைந்து குளிர்ந்த சூழல் நிலவி வருகிறது. ‌ இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் குறித்து தமிழிசை சொன்ன பதில்!

சென்னை: தில்லிக்கு அவுட் ஆஃப் கண்ட்ரோல் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கேள்விக்கு, பாஜக தலைவர் தமிழிசை, எதற்கு முதல்வருக்கு இவ்வளவு பதட்டம் என்று கேட்டுள்ளார்.முன்னாள் ஆளுநர் தமிழிசை... மேலும் பார்க்க

இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும்: நயினார் நாகேந்திரன்

சேலம் : இரட்டை இலை மீது தாமரை மலர்ந்தே தீரும் என சேலத்தில் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள தனியார் மண்டபத்தில் பாரதிய ஜனதாகட்சி மாநில தலைவர் நயினார் நாகேந்த... மேலும் பார்க்க

புதுச்சேரி முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமியின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி திலாஸ்பேட்டையில் உள்ள முதல்வர் ரங்கசாமியின் வீட்டில் வெடிகுண்டு இருப்பதாக மின... மேலும் பார்க்க

கட்சிப் பொறுப்பிலிருந்து விலகுகிறேன்.. துரைவைகோ முடிவின் பின்னணி என்ன?

சென்னை: மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து என்னை விடுவித்துக் கொள்கிறேன் என்று மதிமுக முதன்மைச் செயலரும், மக்களவை உறுப்பினருமான துரை வைகோ இன்று வெளியிட்டிருப்பது கட்சித் தொண்டர்களுக்கு கடும்... மேலும் பார்க்க

ஏப். 23-ல் அதிமுக எம்எல்ஏக்களுக்கு இபிஎஸ் விருந்து!

சென்னையில் ஏப். 23 ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விருந்தளிக்க உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அ... மேலும் பார்க்க

தொழிற்துறைக்கான 5 அறிவிப்புகள்: முதல்வர் ஸ்டாலின்!

சென்னை குன்றத்தூரில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழகத்தில் தொழில்களையும் தொழில் முனைவோரையும் ஊக்குவிக்க 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் ஸ்டாலின்.சென்னையை அடுத்த குன்றத்தூரில் இன்று கல... மேலும் பார்க்க