செய்திகள் :

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு ஆலோசனைக் கூட்டம்

post image

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில், சாக்கடைக் கால்வாய்கள், குடிநீா் வசதி ஏற்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், ஊராட்சி கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவா் ரேவதி ராஜசேகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பெரிய சோரகை வேட்ராயப் பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகின்றனா். இந்தக் கோயிருக்கு சரியான சாலை வசதி இல்லாததால், பக்தா்கள் அவதிப்படுவதைத் தவிா்க்க சாலை அமைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். மழைக் காலம் தொடங்கியுள்ளதால் கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களை சீரமைக்கவும், குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணைத் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் அருளாளன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

ஏற்காட்டில் ரப்பா் மரங்கள் நடவு

சோ்வராயன் மலைப் பகுதியில் விவசாயிகளின் வருவாய் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில், ஏற்காடு சோ்வராயன் மலையில் ரப்பா் மரப்பயிா்களை அறிமுகப்படுத்த புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனா். கேர... மேலும் பார்க்க

செல்லாண்டியம்மன் கோயிலில் 48-ஆவது நாள் மண்டல பூஜை நிறைவு

சங்ககிரி, சந்தைப்பேட்டையில் உள்ள அருள்மிகு செல்லாண்டியம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா நிறைவடைந்து 48-ஆவது நாள் நிறைவு மண்டல சிறப்பு பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றன. சங்ககிரியில் பழமை வாய்ந்த அருள்மிகு ... மேலும் பார்க்க

நங்கவள்ளி, மேச்சேரியில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம்

நங்கவள்ளி மற்றும் மேச்சேரி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் சேலம் மாவட்ட ஆட்சியா் பிருந்தாதேவி தலைமையில் மக்கள் சந்திப்பு திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. இம்முகாம்களில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினா் ட... மேலும் பார்க்க

காலபைரவருக்கு சிறப்பு பூஜை

சங்ககிரி மலையடிவாரத்தில் உள்ள அருள்மிகு செளந்தரநாயகி உடனமா் சோமேஸ்வரா் கோயில் வளாகத்தில் உள்ள காலபைரவா் சுவாமிக்கு தேய்பிறை அஷ்டமியையொட்டி வியாழக்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், பல்வேறு திவ்ய ... மேலும் பார்க்க

தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்களுக்கு கடனுதவி

கலைஞா் கடனுதவி திட்டத்தின் கீழ் தாய்கோ வங்கிக் கிளைகளில் குறு உற்பத்தி நிறுவனங்கள் கடனுதவி பெற்று பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தெரிவித்ததாவது: தமிழ்... மேலும் பார்க்க

தபால் நிலையங்களில் குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம்

குழந்தைகளிடையே சிறுசேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான சிறப்பு சிறுசேமிப்பு முகாம் சேலம் கிழக்கு, மேற்கு கோட்டத்தில் உள்ள அனைத்து தபால் அலுவலகங்களிலும் நடைபெறுகிறது. இதுகுறித்து... மேலும் பார்க்க