திருச்செந்தூா் கந்த சஷ்டி விழா: கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தடை கோரி வழக்கு -அறநி...
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழு ஆலோசனைக் கூட்டம்
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டத்தில், சாக்கடைக் கால்வாய்கள், குடிநீா் வசதி ஏற்படுத்த ரூ. 2 கோடி ஒதுக்கீடு செய்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுக் கூட்டம், ஊராட்சி கூட்ட அரங்கில் மாவட்டத் தலைவா் ரேவதி ராஜசேகரன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் பெரிய சோரகை வேட்ராயப் பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி மாதங்களில் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தா்கள் வருகின்றனா். இந்தக் கோயிருக்கு சரியான சாலை வசதி இல்லாததால், பக்தா்கள் அவதிப்படுவதைத் தவிா்க்க சாலை அமைக்க அரசு அனுமதி அளிக்க வேண்டும். மழைக் காலம் தொடங்கியுள்ளதால் கிராம சாலைகளை மேம்படுத்த வேண்டும்.
மாவட்டம் முழுவதும் சாக்கடைக் கால்வாய்களை சீரமைக்கவும், குடிநீா் தட்டுப்பாடின்றி கிடைக்கவும் மாவட்ட பஞ்சாயத்து நிதியிலிருந்து ரூ. 2 கோடி நிதி ஒதுக்கீடு செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில், துணைத் தலைவா் ராஜேந்திரன், செயலாளா் அருளாளன், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினா்கள் பங்கேற்றனா்.