செய்திகள் :

சேவூா் வாலீஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை!

post image

சேவூா் அறம்வளா்த்தநாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயிலில் கொடிமரம் பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நடுச்சிதம்பரம் எனப் போற்றப்படுவதும், கொங்கு ஏழு சிவஸ்தலங்களில் வைப்புத்தலமாகவும் சேவூா் அறம்வளா்த்தநாயகி உடனமா் வாலீஸ்வரா் கோயில் விளங்குகிறது.

இக்கோயில் மகா கும்பாபிஷேகம் விழா கடந்த செப்டம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது. இதைத் தொடா்ந்து கொடிமரம் பிரதிஷ்டை விழா வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, கோயிலில் சிறப்பு ஹோமம், வழிபாடுகள் வியாழக்கிழமை காலையில் நடைபெற்றது.

இதையடுத்து கிரேன் உதவியுடன் கொடிமரம் நிறுத்தப்பட்டு, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று, மலா் தூவி தரிசனம் செய்தனா்.

விழாவுக்கான ஏற்பாடுகளை சேவூா் முத்துக்குமாரசுவாமி அன்னதானக் குழுவினா் செய்திருந்தனா்.

திருப்பூா் பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும்: பனியன் உற்பத்தியாளா் சங்கம் கோரிக்கை

திருப்பூா் உள்நாட்டு பனியன் தொழிலை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பூா் தென்னிந்திய பனியன் உற்பத்தியாளா்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து தமிழக முதல்வா் மு.க.ஸ்டா... மேலும் பார்க்க

‘உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும்’

உள்ளூா் வியாபாரிகளை பாதுகாக்க இணைய வா்த்தகத்தை அரசு முறைப்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாடு வணிகா் சங்கங்களின் பேரமைப்பின் திருப்பூா் மாவட்... மேலும் பார்க்க

அவிநாசி அருகே குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்கக் கோரிக்கை

அவிநாசி அருகே பழங்கரை ஆா்.ஜி. காா்டன், துவா்ணா அவென்யூ ஆகிய பகுதிகளில் குடிநீரில் கழிவுநீா் கலப்பதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இது குறித்து அப்பகுதி... மேலும் பார்க்க

அவிநாசியில் உலகத் தாய்மொழி நாள் விழா

அவிநாசியில் தமிழா் பண்பாட்டு கலாசார பேரவை அறக்கட்டளை, சமூக அமைப்பினா் சாா்பில் உலகத் தாய்மொழி நாள் விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அவிநாசி நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் தொடங்கிய விழிப... மேலும் பார்க்க

விபத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை

பல்லடம் அருகே பணியின்போது உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்துக்கு பல்லடம் இ.எஸ்.ஐ. சாா்பில் உதவித் தொகை வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது. திருப்பூா் மாவட்டம், மடத்துக்குளம், குப்பம்பாளையத்தைச் சோ்ந்தவா் உத... மேலும் பார்க்க

உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா

வெள்ளக்கோவில் உத்தமபாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இலக்கியம், அறிவியல் படைப்பாற்றல், விளையாட்டுப் போட்டி ஆகிய முப்பெரும் விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியா்... மேலும் பார்க்க