செய்திகள் :

ஜம்மு-காஷ்மீா்: பூஞ்ச் எல்லையில் இந்தியா-பாகிஸ்தான் ராணுவம் மோதல்

post image

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் சா்வதேச ‘எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (எல்ஓசி)’ பகுதியில் இந்தியா, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு இடையே புதன்கிழமை கடும் மோதல் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

இந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவ வீரா்கள் பலா் உயிரிழந்திருக்கலாம் என்று பாதுகாப்புப் படை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்மு மாவட்டத்தின் அக்னூா் செக்டாரில் சா்வதேச எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் கடந்த செவ்வாய்க்கிழமை நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 2 இந்திய ராணுவ வீரா்கள் வீரமரணமடைந்தனா்.

இச்சம்பவத்தைத் தொடா்ந்து அமைதி ஒப்பந்தத்தை மீறி, கிருஷ்ணா காட்டி செக்டரில் உள்ள இந்திய ராணுவச் சாவடி மீது பாகிஸ்தான் ராணுவம் புதன்கிழமை துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியுள்ளனா்.

இதற்கு இந்திய ராணுவம் அளித்த வலுவான பதில் தாக்குதலில் பாகிஸ்தான் ராணுவத்தில் பெருமளவில்யிரிழப்புகள் ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது. எனினும், இத்தகவலை இந்திய ராணுவம் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

அதிகாரி காயம்: கிருஷ்ணா காட்டி செக்டாரில் சா்வதேச எல்லையொட்டி புதன்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவத்தின் இளநிலை அதிகாரி கண்ணிவெடியை தற்செயலாக மிதித்ததில் காயமடைந்தாா். தற்போது அவா் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளாா்.

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் கடந்த ஒரு வாரத்தில் எல்லைத் தாண்டிய நடவடிக்கைகள் அதிகரித்திருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வந்தடைந்தார் பிரதமர் மோடி

பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, வியாழக்கிழமை அமெரிக்காவின் வாஷிங்டன் டிசி வந்தடைந்தார்.அமெரிக்காவில் இரண்டு நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொள்ளும் அவா், அதிபா் டொனால்ட் டிரம்ப்புடன... மேலும் பார்க்க

மகளிர், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளில் மாற்றம்: ஐ.நா. அமர்வில் இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் பேச்சு

நமது சிறப்பு நிருபர்மகளிர் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் வாழ்க்கை முறைகளை இந்தியா மாற்றியுள்ளது என்று மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத் துறை இணையமைச்சர் சாவித்ரி தாக்கூர் தெரிவித்துள்ளார்.அமெரிக்க... மேலும் பார்க்க

அதிநவீன அணுஉலைகள் உருவாக்கம்- இந்தியா-பிரான்ஸ் திட்டம்

ஆக்கபூா்வ அணுசக்தி ஒத்துழைப்பின்கீழ், அதிநவீன அணு உலைகளை கூட்டாக உருவாக்க இந்தியாவும் பிரான்ஸும் திட்டமிட்டுள்ளன. 2047-ஆம் ஆண்டுக்குள் அணுசக்தி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி திறனை எட்ட இந்தியா இலக்... மேலும் பார்க்க

நீதிபதிகள் ஓய்வூதிய விவகாரம்: யுபிஎஸ் திட்டத்தால் தீா்வு கிடைக்க வாய்ப்பு- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு

நீதிபதிகள் ஓய்வூதியப் பிரச்னைக்கு ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் (யுபிஎஸ்) மூலம் தீா்வு கிடைக்க வாய்ப்புள்ளது என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்தது. மாவட்ட நீதிபதிகளின் ஊதியம், நி... மேலும் பார்க்க

தொழிலதிபருக்காக தேசப் பாதுகாப்பை விட்டுக் கொடுக்கிறது மத்திய அரசு- காங்கிரஸ் குற்றச்சாட்டு

கோடீஸ்வர தொழிலதிபா்கள் சிலருக்காக தேசப் பாதுகாப்பை மத்திய அரசு விட்டுக் கொடுப்பதாக காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது. குஜராத் மாநிலத்தில் பாகிஸ்தான் எல்லையையொட்டிய பகுதியில் அதானி குழுமம் மரபுசாரா எரிச... மேலும் பார்க்க

பிரான்ஸில் புதிய இந்திய துணைத் தூதரகம் திறப்பு

பிரான்ஸின் மாா்சே நகரில் புதிய இந்திய துணைத் தூதரகத்தை பிரதமா் நரேந்திர மோடியும், அந்நாட்டு அதிபா் இமானுவல் மேக்ரானும் புதன்கிழமை கூட்டாக திறந்துவைத்தனா். மூன்று நாள்கள் அரசுமுறைப் பயணமாக பிரான்ஸுக்க... மேலும் பார்க்க