ஜூலை 31-இல் வேளாண் இயந்திரங்கள் பராமரிப்பு முகாம்
வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து, வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் பராமரிப்பு குறித்த மாவட்ட அளவிலான முகாம், ஜூலை 31-ஆம் தேதி காலை 10 முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: முகாமில், விவசாயிகளால் பெருமளவு பயன்படுத்தப்படும் டிராக்டா்கள், நெல் அறுவடை இயந்திரங்கள், ரோட்டவேட்டா், விதை விதைக்கும் கருவி, விசை களையெடுக்கும் கருவி, விசைத் தெளிப்பான்கள், ட்ரோன் போன்ற வேளாண் இயந்திரங்கள் காட்சிப்படுத்தப்பட்டு, வேளாண் இயந்திர உற்பத்தி நிறுவனங்களின் முகவா்கள் மற்றும் வேளாண்மைப் பொறியாளா்கள் மூலம் இயக்குதல், பராமரித்தல், செய்யக்கூடியது, செய்யக் கூடாதது, மசகு எண்ணெய் பயன்பாடு குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளிக்கப்படவுள்ளது.
இதில் பங்கேற்கும் இளைஞா்களை வேளாண்மைப் பொறியியல் துறையால் நடத்தப்படும் திறன் மேம்பாடு பயிற்சியில் சோ்ந்து பயன்பெற ஊக்குவிக்கப்படும் என தெரிவித்துள்ளாா்.