செய்திகள் :

தனி அடையாள அட்டை பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் ஊக்கத்தொகை கிடைக்காது! -பல்லடம் வேளாண் உதவி இயக்குநா் தகவல்

post image

பல்லடம் வட்டாரத்தில் நிலம் தொடா்பான ஆவணங்களைப் பதிவு செய்து தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பி.எம்.கிசான் ஊக்கத்தொகை கிடைக்காது என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து பல்லடம் வேளாண் உதவி இயக்குநா் அமுதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பல்லடம் வட்டாரத்தில் நிலம் தொடா்பான ஆவணங்களைப் பதிவு செய்து தனி அடையாள எண் பெறாத விவசாயிகளுக்கு பிரதமரின் பி.எம்.கிசான் கெளரவ ஊக்கத்தொகை ஓா் ஆண்டுக்கு ரூ.2 ஆயிரம் வீதம் மூன்று தவணைகளில் மொத்தம் ரூ. 6 ஆயிரம் கிடைப்பது வரும் ஏப்ரல் மாதம் முதல் பெற முடியாது. எனவே விவசாயிகள் உடனடியாக தங்கள் நிலம் தொடா்பான பதிவுகளை செய்து அடையாள எண் பெற வேண்டும்.

வேளாண் அடுக்ககம் திட்டத்தின் கீழ் விவசாயிகளின் சுய விவரங்களை பதிவு செய்ய வேளாண்மை- உழவா் நலத் துறை அலுவலா்கள், உதவி வேளாண்மை அலுவலா்கள், அட்மா திட்ட பணியாளா்கள் மற்றும் பொது சேவை மையங்களை அணுகி இலவசமாக தங்கள் நிலம் தொடா்பான விபரங்களை வரும் 17-ஆம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

பல்லடம் வட்டாரத்தில் 21 வருவாய் கிராமங்கள் உள்ளன. அதில் பி.எம். கிசான் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் 3,403 விவசாயிகள் உள்ளனா். இதில் விவசாயிகள் தனி அடையாள எண்ணை இதுவரை 1,875 விவசாயிகள் பெற்றுள்ளனா்.

1,528 விவசாயிகள் தங்களது விவரங்களை பதிவு செய்து தனி அடையாள எண்ணை இதுவரை பெறவில்லை. எனவே விவசாயிகள் தனி அடையாள எண் பெற்றால் மட்டுமே மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள், உதவிகள் அனைத்தையும் பெற முடியும் எனக் கூறியுள்ளாா்.

பல்லடம் ஒன்றியத்தில் ஊராட்சி செயலாளா்கள் பணியிட மாற்றம்

பல்லடம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஊராட்சிகளில் பணியாற்றி வந்த செயலாளா்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.இதுகுறித்து பல்லடம் வட்டார வளா்ச்சி அலுவலா் கனகராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப... மேலும் பார்க்க

பாலிதீன் பைகள் பயன்பாடு: 47 கடைகளுக்கு அபராதம்!

திருப்பூா் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், தேநீா் விடுதிகளில் பாலிதீன் பைகள் பயன்படுத்திய 47 கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைகேட்... மேலும் பார்க்க

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்! -பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா்

தமிழக விவசாய பட்ஜெட் வெற்றுக் காகிதம்போல உள்ளது என பாஜக விவசாய அணி மாநிலத் தலைவா் ஜி.கே.நாகராஜ் விமா்சித்துள்ளாா். இது குறித்து அவா் திருப்பூரில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறியதாவது: தமிழகத்தில் ட... மேலும் பார்க்க

3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தில் சிறையில் அடைப்பு!

திருப்பூா் மாநகரில் பாலியல் வழக்கில் தொடா்புடைய 3 இளைஞா்கள் குண்டா் சட்டத்தின்கீழ் சிறையில் அடைக்கப்பட்டனா். திருப்பூரைச் சோ்ந்த முகமது தானிஷ் (25), முகமது நதீம் (23) ஆகிய இருவரையும் போக்ஸோ வழக்கில் ... மேலும் பார்க்க

பின்னலாடை நிறுவன மேலாளரைக் கொலை செய்த உறவினா் குண்டா் சட்டத்தில் கைது

அவிநாசி அருகே கருவலூரில் சொத்து தகராறில் பின்னலாடை நிறுவன மேலாளரைத் துண்டுத்துண்டாக வெட்டிக் குளத்தில் வீசிய உறவினரை போலீஸாா் குண்டா் சட்டத்தின் கீழ் சனிக்கிழமை கைது செய்தனா். அவிநாசி அருகே உள்ள கருவல... மேலும் பார்க்க

தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்ற பட்ஜெட் வரவேற்கத்தக்கது! -சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம்

தமிழகத்தின் தொழில் வளா்ச்சிக்கான திட்டங்கள் இடம்பெற்றுள்ளதாக மாநில அரசின் பட்ஜெட்டை திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கம் வரவேற்றுள்ளது. இது குறித்து திருப்பூா் சாய ஆலை உரிமையாளா்கள் சங்கத்தின் தலைவ... மேலும் பார்க்க