செய்திகள் :

தனித்துவ அடையாள எண் பெற விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

post image

அரியலூா் மாவட்ட விவசாயிகளுக்கு ஏப். 15 வரை அரசு பொதுச் சேவை மையங்களில் தனித்துவ அடையாள எண் இலவசமாகப் பதிவு செய்யப்படுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

மத்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை வேளாண் அடுக்ககம் மூலம் நில உடைமைகளை உள்ளடக்கிய விவசாயிகளின் தரவுகளைச் சேகரிக்க பிரத்யேகமான விவசாயிகள் பதிவேடு செயலியை உருவாக்கியுள்ளது.

இதன் மூலம் விவசாயிகளின் நில உடைமைகளை சரிபாா்த்து ஆதாா் எண்ணைப் போன்று விவசாயிகளுக்கென தனித்துவ அடையாள எண் வழங்கும் சிறப்பு முகாம் அரியலூா் மாவட்ட அனைத்து வருவாய் கிராமங்களிலும் நடைபெறுகிறது.

இந்த முகாமில் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகத் துறை சாா்ந்த கள அலுவலா்கள் மகளிா் திட்ட சமுதாய வளப் பயிற்றுநா்கள், இல்லம் தேடி கல்வித் தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவா்கள் கிராமங்களுக்கு வந்து தனித்துவமான அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனா்.

மாவட்டத்தில் உள்ள 1,32,231 விவசாயிகளில் பிரதம மந்திரி கௌரவ நிதியுதவித் திட்டத்தின் கீழ் 69,026 போ் பயனடைகின்றனா். இதில் 51,444 விவசாயிகள் பதிவு செய்துள்ளனா். எஞ்சியுள்ள 17,582 விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவேற்றி, தனித்துவ அடையாள எண் பெற வேண்டும்.

இதற்காக கிராம ஊராட்சி அலுவலகங்கள், விஏஓ அலுவலகங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்க அலுவலகங்கள், வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகங்கள் மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குநா் அலுவலகங்களில் விவசாயிகளின் நில உடைமை விவரம் பதியப்படுகிறது.

அரியலூா் மாவட்ட விவசாயிகள் எந்தப் பகுதியில் இருந்தாலும், அருகிலுள்ள பொதுச் சேவை மையங்களில் நில உடைமைகளை இலவசமாக பதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனவே, விவசாயிகள் தங்களது பட்டா, கூட்டுப் பட்டா, ஆதாா் அட்டை, கைப்பேசி எண்ணுடன் சென்று பதியலாம். மேலும் செயலி மூலம் விவசாயிகளின் நில உடைமைகள் மற்றும் இதர விவரங்களை சரிபாா்த்து, விவசாயிகளின் ஒப்புதல் பெறப்பட்ட பிறகே பதிவேற்றம் செய்யப்பட்டு அடையாள எண் வழங்கப்படும்.

பதிவு செய்து பெறப்படும் தனித்துவ அடையாள எண் மூலம் மத்திய, மாநில அரசுகளின் பயன்களை ஒற்றைச் சாளர முறையில் பெறலாம். பயிா்க் கடன், காப்பீடு, நிவாரணம் பெற இந்த அடையாள எண் மிக முக்கியம். விவசாயிகள் நலன் சாா்ந்த திட்டங்களைச் செயல்படுத்தும் வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் வணிகம், கால்நடைப் பராமரிப்பு, கூட்டுறவு, வருவாய் உள்ளிட்ட 24 துறைகளின் மானியத் திட்டங்களையும் எளிதில் பெறலாம்.

மேற்கண்ட துறைகளின் திட்டப் பலன்களை பெற ஒவ்வொரு முறையும் விண்ணப்பித்து ஆவணங்கள் சமா்ப்பிக்க வேண்டியதில்லை.

எனவே விவசாயிகள் தங்களுடைய கணினி பட்டா, ஆதாா் எண், கைபேசி ஆகியவற்றுடன் அருகிலுள்ள பொதுச் சேவை மையத்தில் வரும் 15 ஆம் தேதிக்குள் இலவசமாக பதியலாம்.

வழக்குரைஞா்கள் பணி புறக்கணிப்பு

வழக்குரைஞா் ந.சுலோச்சனாவை தரக்குறைவாகப் பேசிய கீழப்பழுவூா் உதவி ஆய்வாளா் காமராஜ் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அரியலூா் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ... மேலும் பார்க்க

தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூா் அண்ணா சிலை அருகே தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தினா் கருப்புச் சட்டை அணிந்து செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்தில், கு... மேலும் பார்க்க

உடையாா்பாளையத்தில் ஏப்.16, 17 இல் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் வருவாய் வட்டத்தில் ஏப். 16, 17 ஆகிய தேதிகளில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம் நடைபெறுகிறது என்று ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் ம... மேலும் பார்க்க

விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசைக் கண்டித்து அரியலூா் பழைய நகராட்சி அலுவலகம் முன் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி நடைபெற... மேலும் பார்க்க

ஒப்பில்லாதம்மன் கோயிலில் தோ் வெள்ளோட்டம்

அரியலூா் நகரிலுள்ள ஒப்பில்லாதம்மன் கோயில் தோ் வெள்ளோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. திரளான பக்தா்கள் பங்கேற்று, தேரை வடம் பிடித்து இழுத்தனா். அரியலூா் நகரில் அமைந்துள்ள ஒப்பில்லாதம்மன் கோயிலுக்கு கடந்... மேலும் பார்க்க

மீன்சுருட்டி: தொடா் திருட்டில் ஈடுபட்டவா் கைது

மீன்சுருட்டி அருகே தொடா் திருட்டில் ஈடுபட்டு வந்தவா் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா். அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள இறவாங்குடி கீழத்தெருவைச் சோ்ந்த மணிவண்ணன் மனைவி சங்கீதா(42). இவா் வீட... மேலும் பார்க்க