செய்திகள் :

உத்தரகண்ட்: 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று!

post image

உத்தரகண்ட் மாநிலத்தின் சிறையில் 15 புதிய சிறைக் கைதிகளுக்கு எச்.ஐ.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

ஹரிதுவார் மாவட்ட சிறையில் அடைக்கப்பட அழைத்து வரப்பட்ட புதிய சிறைக் கைதிகளுக்கு கடந்த ஏப்.7 அன்று மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. அந்தச் சோதனைகளின் ஒரு பகுதியாக எச்.ஐ.வி. சோதனையும் மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில், அவ்வாறு புதியதாக அழைத்து வரப்பட்ட கைதிகளில் 15 பேருக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உறுதிச் செய்யப்பட்டுள்ளாதாக அந்த சிறையின் தலைமைக் காவலர் மனோஜ் குமார் ஆர்யா இன்று (ஏப்.9) தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், சிறைக்கு புதியதாக ஒரு கைதி அழைத்து வரப்பட்டால் அவருக்கு எச்.ஐ.வி. உள்பட அனைத்து விதமான மருத்துவச் சோதனைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தற்போது அந்தத் தொற்றுக் கண்டறியப்பட்ட 15 கைதிகளுக்கு முறையான மருத்துவச் சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக, கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியாவில் கண்டறியப்பட்ட எச்.ஐ.வி. தொற்றுக்களின் எண்ணிக்கையானது 2010-ல் பதிவான எண்ணிக்கையை விட 44 சதவிகிதம் குறைந்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வுத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க:குடியரசுத் தலைவருக்கு ஸ்லோவாக்கியா அளித்த பரிசு!

வக்ஃப் சட்டம்: திட்டமிட்டபடி நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம்! - இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக திட்டமிட்டபடி தமிழகத்தில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் நாளை(ஏப். 18) ஆர்ப்பாட்டம் நடைபெறும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ... மேலும் பார்க்க

சட்டவிரோதமாக தில்லியில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் கைது!

சட்டவிரோதமாக இந்தியாவில் குடியேறிய 8 வங்கதேசத்தினர் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தெற்கு தில்லியின் காட்வாரியா சாராய் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறி வாழ்ந்து வந்த பாபியா காத்தூன் (வயது 3... மேலும் பார்க்க

ஆளுநர் ஆர்.என். ரவி திடீர் தில்லி பயணம்!

தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி திடீரென இன்று(வியாழக்கிழமை) தில்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளிக்காமல் கிடப்... மேலும் பார்க்க

ஈரானில் கொலையுண்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் தாயகம் சென்றது!

ஈரான் நாட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட 8 பாகிஸ்தானியர்களின் உடல்கள் அவர்களது தாயகம் கொண்டு செல்லப்பட்டது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 8 பேர் ஈரானின் சிஸ்தான் மாகாணத்தின் மெஹ்ர்ஸ்தான் மாவட்டத்த... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே பழமை வாய்ந்த சிவன் கோயிலில் இளையராஜா சுவாமி தரிசனம்

வாணியம்பாடி அருகே ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஸ்ரீ பிரஹன்நாயகி சமேத அதிதீஸ்வரர் சிவன் ஆலயத்தில் இசையமைப்பாளா் இளையராஜா வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தாா். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பழைய... மேலும் பார்க்க

நாத்திகம் பெயரில் நாடகமாடும் கூட்டத்துக்கு மக்கள் பாடம் புகட்டுவாா்கள்: அண்ணாமலை

சென்னை: ஹிந்து மத நம்பிக்கைகளை அவமானப்படுத்துவதை இனியும் தொடா்ந்தால், மக்கள் சரியான பாடம் புகட்டுவாா்கள் என தமிழக பாஜக முன்னாள் தலைவா் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திமுக அமைச்சா்களிடையே, முதல்வா் குடும்ப... மேலும் பார்க்க