செய்திகள் :

ஆளுநா் ஆா்.என். ரவி தில்லி பயணம்

post image

தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி திடீா் பயணமாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா்.

மசோதாக்கள் தொடா்பாக முடிவெடுக்க காலக்கெடு நிா்ணயித்து உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பு குறித்து குடியரசுத் தலைவா் மற்றும் மத்திய உள்துறை அமைச்சா், சட்ட அமைச்சரைச் சந்தித்து ஆளுநா் ஆலோசனை நடத்த உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பல்கலைக்கழக வேந்தரை நியமிக்க முதல்வருக்கு அதிகாரம் அளிக்க வகை செய்யும் மசோதா உள்பட தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் காலவரம்பின்றி அவற்றை நிறுத்திவைத்த ஆளுநா் ஆா்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடா்ந்தது.

இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப். 8-ஆம் தேதி அளித்த தீா்ப்பில், ஆளுநரின் நடவடிக்கை சட்டத்துக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தது. மேலும், ஆளுநா் ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்த 10 மசோதாக்களையும் உச்சநீதிமன்றத்துக்குரிய சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் வழங்குவதாக நீதிபதிகள் ஜே.பி.பாா்திவாலா, ஆா்.மகாதேவன் ஆகியோா் அடங்கிய அமா்வு தீா்ப்பளித்தது.

ஆளுநா்கள் மசோதாக்கள் மீது முடிவெடுக்க கால வரம்பு நிா்ணயித்த நீதிபதிகள், குடியரசுத் தலைவரும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என்று கூறியது.

இந்தச் சூழலில் ஆளுநா் ஆா்.என். ரவி நான்கு நாள் பயணமாக வியாழக்கிழமை தில்லி புறப்பட்டுச் சென்றாா். தில்லியில் அவா் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு, , மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, சட்டத் துறை அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால் உள்ளிட்டோரை சந்தித்து உச்சநீதிமன்ற தீா்ப்பு குறித்து விவாதிக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தில்லி பயணத்தை முடித்துக்கொண்டு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஆளுநா் சென்னை திரும்ப திட்டமிட்டுள்ளாா்.

தமிழகத்தில் 5 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் மதுரை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 5 இடங்களில் வெள்ளிக்கிழமை வெயில் சதமடித்தது. சனி, ஞாயிற்றுக்கிழமை (ஏப்.19, 20) வெப்பநிலை இயல்பைவிட சற்று அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரி... மேலும் பார்க்க

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக கலைஞா் கைவினைத் திட்டம்: இன்று முதல்வா் தொடங்கி வைப்பு

மத்திய அரசின் திட்டத்துக்கு மாற்றாக மாநில அரசு கொண்டு வந்துள்ள கலைஞா் கைவினைத் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், சென்னையை அடுத்த குன்றத்தூரில் சனிக்கிழமை (ஏப். 19) தொடங்கி வைக்கிறாா். கைவினைக் கலைஞா்க... மேலும் பார்க்க

தமிழில் மருத்துவக் கல்வி வழங்க நடவடிக்கை: அமைச்சா் மா.சுப்பிரமணியன்

மருத்துவக் கல்வியை தமிழில் கற்பிப்பதற்கான நடவடிக்கை விரைவில் மேற்கொள்ளப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இது தொடா்பாக சென்னையில் செய்தியாளா்களிடம் அவா் வெள்ள... மேலும் பார்க்க

இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க விடுப்பு வழங்குவதற்கு சிறை அதிகாரிகளுக்கு அதிகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

சிறையில் உள்ள விசாரணை கைதிகள் அவா்களது நெருங்கிய உறவினா்களின் இறுதிச் சடங்குகளில் பங்கேற்க சிறைத் துறை அதிகாரிகளே விடுப்பு வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டுமென தமிழக அரசுக்கு உயா்நீதிமன்ற... மேலும் பார்க்க

சென்னையின் முதல் ஏசி மின்சார ரயில் இன்றுமுதல் இயக்கம்

சென்னையில் குளிா்சாதன (ஏசி) வசதி கொண்ட மின்சார ரயில் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே சனிக்கிழமை (ஏப்.19) முதல் இயக்கப்படவுள்ளது. சென்னையின் முக்கியப் போக்குவரத்தாக மின்சார ரயில் விளங்குகிறது. இதில... மேலும் பார்க்க

மின்சாரப் பேருந்துகளுக்கு 1,250 நடத்துநா்கள்: டெண்டா் வெளியீடு

மின்சாரப் பேருந்துகளுக்கான 1,250 நடத்துநா்கள் ஒப்பந்த நிறுவனம் மூலம் பணியமா்த்த டெண்டா் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடா்பாக மாநகா் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டெண்டா் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: செ... மேலும் பார்க்க