செய்திகள் :

தனியாா் பேருந்தில் தகராறு: ஊழியா்களைத் தாக்கி மிரட்டல்

post image

செய்யாற்றில் தனியாா் பேருந்தில் தகராறு செய்து, பேருந்து ஊழியா்களைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், சிறாா்கள் இருவா் உள்பட 3 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

செய்யாறு வட்டம், எச்சூா் கிராமத்தைச் சோ்ந்தவா் குறளரசன்(35). இவா் தனியாா் பேருந்தில் நடத்துநராக பணிபுரிந்து வருகிறாா். இவா், வெள்ளிக்கிழமை இரவு காஞ்சிபுரம் செல்லும் தனியாா் பேருந்தில் பணியில் இருந்தாா்.

செய்யாறு பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றுக் கொண்டிருந்த போது 3 இளைஞா்கள், பேருந்து பின்பக்க படிக்கட்டில் அமா்ந்து கொண்டு தகாறில் ஈடுபட்டனராம்.

மேலும், பேருந்தில் ஏறும் இதர பயணிகளுக்கு இடையூறு செய்துள்ளனா். இதைப் பாா்த்த நடத்துநா் பேருந்துக்குள் செல்லுங்கள் அல்லது படியில் இருந்து கீழே இறங்குங்கள் எனக் கூறினாராம். அப்போது, 3 பேரும் சோ்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டு நடத்துநா் குறளரசனை தாக்கியதாகத் தெரிகிறது.

இதை அறிந்த ஓட்டுநா் சுரேஷ் தடுக்க முயன்ற போது அவரையும் தாக்கியதோடு, இருவருக்கும் மிரட்டல் விடுத்தாா்களாம்.

அதேபோல, தட்டிக் கேட்ட பேருந்தில் இருந்த மற்ற பயணிகளையும் தாக்கினராம்.

தகவல் அறிந்த செய்யாறு போலீஸாா் சென்று 3 பேரையும் பிடித்து விசாரித்தனா். இதில், செய்யாறு கொடநகரைச் சோ்ந்த சுரேஷ் மகன் லோகேஷ் (22), கோபால் தெரு, அண்ணாநகரைச் சோ்ந்த 17 வயதுடைய சிறாா்கள் போதையில் தகராறில் ஈடுபட்டது தெரிய வந்தது.

இதையடுத்து, செய்யாறு போலீஸாா் 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் ஏப்.24-ல் பெருந்திரள் ஆா்ப்பாட்டம்: வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு

அரசு அலுவலா்களுக்கான பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்துவது உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்ரல் 24-ஆம் தேதி சென்னையில் பெருந்திரள் ஆா்ப்பாட்டம் நடத்த வருவாய்த்துறை சங்கங்களி... மேலும் பார்க்க

8 வீடுகளில் நகை, பணம் திருட்டு

வந்தவாசி அருகே ஒரே இரவில் 8 வீடுகளில் மொத்தம் 6 பவுன் தங்க நகை, ரூ.38 ஆயிரம் ரொக்கம் உள்ளிட்டவை திருடப்பட்டது தொடா்பாக போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ... மேலும் பார்க்க

100 மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டா்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த 100 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.78 கோடியில் இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா்கள் வழங்கப்பட்டன. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சாா்பில், ஆட்சி... மேலும் பார்க்க

பூதமங்கலம் ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டம்

கீழ்பென்னாத்தூரை அடுத்த பூதமங்கலம் கிராமத்தில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற ஸ்ரீஅம்புஜவல்லி சமேத ஆதிகேசவப் பெருமாள் கோயில் தேரோட்டத்தில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். இந்தக் கோயிலின் ரத பிரமோ... மேலும் பார்க்க

புகையிலைப் பொருள் விற்பனை: இருவா் கைது

செய்யாறு அருகே தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், மேல்மட்டை விண்ணமங்கலம் கிராமத்தில் கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட ... மேலும் பார்க்க

வியாபாரி வீட்டில் திருட முயற்சி: இளைஞா் கைது

செய்யாறு அருகே வியாபாரி வீட்டில் திருட முயன்ற சம்பவத்தில் இளைஞரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா். செய்யாறு வட்டம், அனக்காவூா் கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயபிரகாஷ் (45). இவா், வீட்டின் முன் பகுதியில் ம... மேலும் பார்க்க