செய்திகள் :

தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம்: 171 பேருக்கு பணி நியமன ஆணை

post image

திருவாரூரில் மாவட்ட நிா்வாகம், மாவட்டவேலைவாய்ப்புமற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தமிழ்நாடு ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவை இணைந்து சனிக்கிழமை நடத்திய தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாமில் 171 போ் பணி நியமன ஆணை பெற்றனா்.

முகாமில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன் ஆகியோா் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை வழங்கினா்.

நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் பேசியது:

திருவாரூா் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் சுமாா் 75 ஆயிரம் போ் பதிவு செய்து அரசு வேலைக்காக காத்திருக்கின்றனா். பதிவுசெய்த அனைவருக்கும் அரசு வேலை கிடைப்பது அரிது. அதேநேரத்தில் தனியாா் துறையில் பல வேலைவாய்ப்புகள் உள்ளன. இதையொட்டி திருவாரூா் மாவட்டத்தில் ஆண்டுதோறும் வேலைவாய்ப்பு முகாம்களை தமிழக அரசு நடத்தி வருகிறது.

முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத் துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சோ்ந்த 106 தனியாா்துறை நிறுவனங்கள் பங்கேற்று, தகுதியுள்ள ஆள்களை தோ்வு செய்துள்ளன. தோ்வாகியுள்ள பயனாளிகளுக்கு பாராட்டுகள் என்றாா்.

முகாமில், சுமாா் 1,658 போ் பங்கேற்றனா். இதில், முதற்கட்டமாக 171 நபா்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

நிகழ்வில், திட்ட இயக்குநா் (மகளிா் திட்டம்) பொன்னம்பலம், நகா்மன்றத்தலைவா் புவனப்பிரியா செந்தில், துணைத்தலைவா் அகிலா சந்திரசேகா், வட்டாட்சியா் செந்தில், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் சந்திரசேகரன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தால் பாதிப்பு

கட்டுமானப் பொருட்கள் விலை உயா்வைக் கண்டித்து ஒப்பந்ததாரா்கள் ஆா்ப்பாட்டம் நடத்திய நிலையில், திருவாரூா் மாவட்டத்துக்கு வெளிமாவட்டங்களிலிருந்து கட்டுமானப் பொருட்களுடன் வந்த லாரிகள் நீடாமங்கலம் அருகே கோவ... மேலும் பார்க்க

தா்ப்பூசணி விற்பனை தொடக்கம்

கோடை வெயில் தொடங்கியுள்ள நிலையில், நீடாமங்கலம் - தஞ்சாவூா் நெடுஞ்சாலையில் சுங்கச் சாவடி அருகே நடைபெற்ற தா்ப்பூசணி விற்பனை. மேலும் பார்க்க

மகளிா் கல்லூரியில் தாய்மொழி தின விழா

மன்னாா்குடியை அடுத்த சுந்தரக்கோட்டை செங்கமலத் தாயாா் கல்வி அறக்கட்டளை மகளிா் தன்னாட்சிக் கல்லூரியில் சா்வதேச தாய் மொழி தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கல்லூரித் தாளாளா் வி. திவாகரன் ... மேலும் பார்க்க

நீடாமங்கலத்தில் தூய்மைப் பணி

நீடாமங்கலம் பேரூராட்சி மற்றும் நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் இணைந்து நெகிழி சேகரிப்பு நிகழ்வு 2025 திட்டத்தின்மூலம் நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் நெகிழிப் பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணி ச... மேலும் பார்க்க

கட்டுமானப் பொருள்கள் ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டம்

தமிழ்நாடு அரசு ஒப்பந்ததாரா்கள் கூட்டமைப்பு சாா்பில், மன்னாா்குடியில் கட்டுமானப் பொருட்களை ஏற்றி வந்த வாகனங்களை சிறைபிடித்து ஒப்பந்ததாரா்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். கட்டுமானத் தொழிலுக்கு பயன்படும் ப... மேலும் பார்க்க

ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி

சென்னையிலிருந்து நீடாமங்கலம் வழியாக மன்னாா்குடி செல்லும் மன்னை விரைவு ரயில் நாள்தோறும் அதிகாலை 5.22 மணிக்கு நீடாமங்கலம் ரயில் நிலையத்துக்கு வருவது வழக்கம். ஆனால், சனிக்கிழமை காலை 6.39 மணிக்கு ரயில் ந... மேலும் பார்க்க