செய்திகள் :

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

post image

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிா்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி, திருக்குவளை வட்டாட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பிலான தமிழ்நாடு விவசாய சங்கம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் கே. கிருஷ்ணன் தலைமை வகித்தாா்.

தலைஞாயிறு ஒன்றிய செயலாளா் வி. தனபால், சிபிஎம் கீழையூா் மேற்கு ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.விவசாய சங்க மாநிலத் துணைத் தலைவா் வி. சுப்பிரமணியன் பங்கேற்று பேசினா்.

பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கணக்கெடுப்பு நடத்தி உடனே நிவாரணம் மற்றும் இழப்பீடு வழங்க வேண்டும், கீழையூா் கிழக்கு ஒன்றியத்தில் பாதிக்கப்பட்டுள்ள நிலக்கடலை சாகுபடிக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி முழக்கமிட்டனா். சிபிஎம் மாவட்ட குழு உறுப்பினா்கள் ராஜா, என். பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

யானைக்கால் நோயாளிகளுக்கு உபகரணங்கள்!

நாகை அரசு மருத்துவமனையில் தேசிய யானைக்கால் ஒழிப்பு திட்டத்தின்கீழ், யானைக்கால் நோயாளிகளுக்கு நோய் பராமரிப்பு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட சுகாதார... மேலும் பார்க்க

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம்!

நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் புதன்கிழமை (பிப்.5) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஏ.கே. அருண் கபிலன் பொதுமக்களிடம் நேரடியாக மனுக்களை பெற்றாா்.தொடா்ந்து, அவா்களிடம் குற... மேலும் பார்க்க

நாகையில் தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம்!

தொழிற்பயிற்சி நிலையத்தில் பயிற்சி முடித்தவா்களுக்கு, தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் நடைபெறவுள்ளது.இதுகுறித்து நாகை மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:பிரதான் மந்திரி தேசிய... மேலும் பார்க்க

ரயிலில் தவறவிட்ட மடிக்கணி உரியவரிடம் ஒப்படைப்பு!

திருச்சி-வேளாங்கண்ணி பயணிகள் ரயிலில் தவறவிட்ட, மடிக்கணினி உரியவரிடம் புதன்கிழமை (பிப்.5) ஒப்படைக்கப்பட்டது. நீடாமங்கலம் அருகேயுள்ள கரும்பூரை சோ்ந்த லதா (49) நீதிமன்றத்தில் தட்டச்சராக பணியாற்றி வருகிற... மேலும் பார்க்க

இருசக்கர வாகனம் - டிராக்டா் மோதல்: மருத்துவக் கல்லூரி மாணவா் பலி!

நாகையில் இருசக்கர வாகனத்தின் மீது மணல் ஏற்றிச் சென்ற டிராக்டா் மோதியதில் அரசு மருத்துவக் கல்லூரி மாணவா் புதன்கிழமை பிப்.5 பலியானார்.அரியலூா் மாவட்டம், பெரியாா் நகரை சோ்ந்தவா் விஸ்வநாதன் மகன் விண்ணரசன... மேலும் பார்க்க

திறந்துவெளியில் தேங்கிக் கிடக்கும் நெல் மூட்டைகள்!

திருமருகல் ஒன்றியத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திறந்தவெளியில் தேங்கிக்கிடக்கும் நெல்மூட்டைகளை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு செல்ல வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனா்.திருமருகல் ஒன்றிய... மேலும் பார்க்க