செய்திகள் :

தவறான விடியோக்கள்: 25 செயலிகள், இணையதளங்களை முடக்கியது மத்திய அரசு

post image

தவறான விடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள 25 செயலிகள், இணையதளங்களுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

தடை செய்யப்பட்ட இணையதளம், செயலிகளை இந்தியாவில் மக்கள் பார்க்காத வகையில் தடை செய்யுமாறு இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய உள்விவகாரத் துறை அமைச்சகம், மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை, சட்ட விவகாரத் துறை, தொழில்துறை அமைப்புகள் இணைந்து, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளன.

இது குறித்து வெளியான தகவலில், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறையானது, 25 இணையதள இணைப்புகளில், பாலியல் விடியோ உள்ளிட்ட தவறான விளம்பரங்கள் இடம்பெற்றிருப்பதைக் கண்டுபிடித்த நிலையில், அவற்றை தடை டெசய்ய நடவடிக்கை எடுத்துள்ளது.

இவற்றில் ஏல்டிடி, யுஎல்எல்யு, பிக் ஷாட்ஸ் செயலி, டெசிஃபிளிக்ஸ், பூமெக்ஸ், நவரச லைட், குலாப் செயலி, கங்கன் செயலி, புல் செயலி, ஜால்வா செயலி, வாவ் என்டர்டெயின்மென்ட், லூக் என்டர்டெயின்மென்ட், ஷோஎக்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.

தகவல் மற்றும் ஒளிபரப்புச் சட்டத்தை மீறி இந்த இணையதளங்கள், செயலிகள் செயல்பட்டு வருவதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. மேலும், தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000-ன்படி, இதுபோன்ற இணையதளங்களை முடக்குவது அல்லது நீக்குவதற்கு இடைத்தொடர்பாளர்களே பொறுப்பு. இதுபோன்ற சட்டத்தை மீறி செயல்படும் இணையதளங்களை நீக்குவது அல்லது முடக்குவதை மேற்கொள்ளாத இடைத்தொடர்பாளர்கள், இந்த விடியோக்களுக்குப் பொறுப்பாவதிலிருந்து விலக்குப் பெறும் உரிமையை இழந்துவிடுவார்கள். குறிப்பாக, உரிய அரசிடமிருந்து முடக்குமாறு அறிக்கை வந்தபிறகு, இது முழுக்க முழுக்க இடைத்தொடர்பார்களின் பொறுப்பாக இருக்கிறது.

சூதாட்ட இணையதளங்கள்

2022 முதல் 2025 ஜூன் வரை நாட்டில் சட்டத்துக்கு விரோதமாக செயல்பட்டு வந்த 1,524 சூதாட்ட இணையதளங்களும், செல்போன் செயலிகளும் முடக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில், மத்திய அரசு புதன்கிழமை தெரிவித்திருந்தது.

The central government has banned 25 apps and websites that have uploaded inappropriate videos.

இதையும் படிக்க.. ஜிபே, போன்பே, பிம் செயலிகளைப் பயன்படுத்துபவரா? ஆக.1 முதல் புதிய விதிமுறைகள்!

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத... மேலும் பார்க்க

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க