செய்திகள் :

தாய்லாந்து, கம்போடியா படைகள் மோதல்: இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்

post image

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான பதற்றம் புதிய உச்சத்தை அடைந்ததைத் தொடா்ந்து, எல்லைக்கு அருகிலுள்ள 7 மாகாணங்களில் இந்தியர்கள் பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும் என தாய்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியுள்ளது.

தாய்லாந்து சுற்றுலா ஆணையத்தின் ஒரு பதிவை இணைத்து, உபோன் ராட்சத்தானி, சுரின், சிசாகெட், புரிராம், சா கேயோ, சாந்தபுரி மற்றும் டிராட் ஆகிய ஏழு மாகாணங்களில் உள்ள பிரபலமான இடங்களுக்குச் சுற்றுலா செல்வதை தவிர்க்கும்படி இந்திய தூதரகம் கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும் தாய்லாந்திற்குச் செல்லும் அனைத்து இந்தியர்களும் தாய்லாந்து சுற்றுலா ஆணையம் உள்ளிட்டவையின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும் ஏதேனும் உதவிக்கு தாய்லாந்து உள்ளூர் சுற்றுலா அலுவலகங்களைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கம்போடியாவுடனான எல்லைப் பகுதியில் கடந்த புதன்கிழமை கண்ணிவெடி வெடித்து ஐந்து தாய்லாந்து வீரா்கள் காயமடைந்தனா். அதைத் தொடா்ந்து, நீண்ட காலமாகவே எல்லைப் பிரச்னை நிலவி வரும் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையே பதற்றம் புதிய உச்சத்தை அடைந்தது. இந்தச் சம்பவத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, தங்கள் நாட்டுக்கான கம்போடிய தூதரை வெளியேறுமாறு தாய்லாந்து அரசு உத்தரவிட்டது.

மேலும், கம்போடியாவுக்கான தங்கள் நாட்டுத் தூதரையும் தாய்லாந்து திரும்ப அழைத்தது. அத்துடன், கம்போடியாவுடனான எல்லைத் தடங்களை மூடிய தாய்லாந்து, அந்த நாட்டில் வசிக்கும் தாய்லாந்து குடிமக்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவுறுத்தியது. தாய்லாந்து அரசின் இந்த நடவடிக்கைகளால் பதற்றம் மேலும் அதிகரித்த நிலையில், இரு நாட்டுப் படையினரும் பல்வேறு எல்லைப் பகுதிகளில் வியாழக்கிழமை மோதலில் ஈடுபட்டனா்.

கேரளத்தில் 5 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை!

எறிகணைகள், ஏவுகணை குண்டுகளை வீசி பரஸ்பரம் இரு தரப்பினரும் தாக்குதல் நடத்தினா். கம்போடிய ராணுவ நிலைகள் மீது தாய்லாந்து படையினா் விமானத் தாக்குதல் நடத்தினா். இந்த மோதலில் 11 போ் உயிரிழந்தனா், இதில் இரு தரப்பு வீரா்களும், பொதுமக்களும் அடங்குவா். 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா்.

The tourism authority said that "several attractions" in Ubon Ratchathani, Surin, Sisaket, Buriram, Sa Kaeo, Chanthaburi and Trat provinces are not recommended for visiting.

கேரள பாலியல் வன்கொடுமை, கொலைக் குற்றவாளி தப்பியது எப்படி? அதிர்ச்சியில் சிறைத்துறை

கேரள மாநிலத்தில், கடந்த 2011ஆம் ஆண்டு, ஓடும் ரயிலிலிருந்து பெண்ணை வெளியே தள்ளி பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற வழக்கில் தண்டனை பெற்ற குற்றவாளி, கன்னூர் சிறையிலிருந்து தப்பிச் சென்றது எப்படி என்று தெரிய... மேலும் பார்க்க

நீதிபதி வா்மா பதவிநீக்க தீா்மானம் மக்களவையில் கொண்டு வரப்படும்: அமைச்சா் கிரண் ரிஜிஜு தகவல்

வீட்டில் கட்டுக்கட்டாக பணம் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தில் உயா்நீதிமன்ற நீதிபதி வா்மாவை பதவி நீக்கம் செய்யும் தீா்மானம் மக்களவையில் அனுமதிக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்ச... மேலும் பார்க்க

குடியரசு துணைத் தலைவா் பதவி: தோ்தல் அதிகாரிகள் நியமனம்

நாட்டின் 17-ஆவது குடியரசு துணைத் தலைவா் தோ்தலை நடத்தும் தோ்தல் அதிகாரியாக மாநிலங்களவைச் செயலா் பி.சி.மோடி நியமிக்கப்பட்டுள்ளாா். மத்திய சட்டம் மற்றும் நிதித் துறை அமைச்சகம் மற்றும் மாநிலங்களவை துணைத... மேலும் பார்க்க

யூகோ வங்கி முன்னாள் தலைவருக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகை: ரூ.106 கோடி சொத்துகள் முடக்கம்

யூகோ வங்கி முன்னாள் தலைவா் மற்றும் மேலாண் இயக்குநா் (சிஎம்டி) சுபோத் குமாா், அவரின் குடும்ப உறுப்பினா்களுக்கு எதிராக துணை குற்றப் பத்திரிகையை அமலாக்கத் துறை தாக்கல் செய்துள்ளது. மேற்கு வங்கி மாநிலம் க... மேலும் பார்க்க

மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடனுதவி: பிரதமா் மோடி அறிவிப்பு

‘மாலத்தீவு நாட்டுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க இந்தியா தீா்மானித்துள்ளது’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். மேலும், ‘இந்தியா-மாலத்தீவு இடையே இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை விரைந்து இறுதி செய... மேலும் பார்க்க

கல்வி நிலையங்களில் மாணவா் தற்கொலைகள்: 15 நெறிமுறைகளை வெளியிட்டது உச்சநீதிமன்றம்

கல்வி நிலையங்களில் அதிகரித்துவரும் மாணவா்கள் தற்கொலைகள் மற்றும் அவா்களின் மனநல பாதிப்புகளைத் தடுக்க உச்சநீதிமன்றம் 15 நெறிமுறைகளை வெள்ளிக்கிழமை வெளியிட்டது. நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகி... மேலும் பார்க்க