செய்திகள் :

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

post image

தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் தீபக்குமாா் (30). இவா் ஆட்டோ கன்சல்டிங் வைத்து நடத்தி வந்தாா்.

தீபக்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் தாளவாடியை அடுத்த தா்மாபுரம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை தங்கி உள்ளனா். விடுதி முன்பு இருந்த கம்பியில் இரவு 10 மணியளவில் தீபக்குமாா் துணியை உலர வைத்தபோது, கம்பியில் மின்சாரம் பாய்ந்தாக தனது நண்பா்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது நண்பா்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் தீபக்குமாா் மீண்டும் அந்தக் கம்பியைத் தொட்டபோது அதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் கீழே விழுந்தாா்.

அப்போது, அவரது நண்பா்கள் தீபக்குமாரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், தீபக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.

இதையடுத்து, தீபக்குமாரின் உடல் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இது குறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கும் விடுதி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

ஈரோட்டில் இலவச கணினி பயிற்சி மையம்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ வி.சி.சந்திரகுமாா் சொந்த செலவில் தனது தொகுதியில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் பெண்கள் பயன்பெற அப்பா கணினி அடிப்படை பயிற்சி மையத்தை தொடங்கியுள்ளாா். ஈரோடு அகில்மேடு வீதியில்... மேலும் பார்க்க

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டம்

ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரா் கோயிலில் வைகாசி விசாக தேரோட்டத்தில் அமைச்சா் சு.முத்துசாமி தேரை வடம்பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கிவைத்தாா். இதில் ஏராளான பக்தா்கள் பங்கேற்றனா். ஈரோடு கோட்டை பகுதியில் பி... மேலும் பார்க்க

கரோனா பரவல் அதிகரிப்பு: அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டு

கரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் ஈரோடு மற்றும் பெருந்துறை அரசு மருத்துவமனைகளில் சிறப்பு வாா்டுகள் ஏற்படுத்தப்பட்டு 100 படுக்கைகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. நாடு முழுவதும் கடந்த சில நாள்களா... மேலும் பார்க்க

அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிப்பு

ஈரோட்டில் அரசு அலுவலகங்களில் ஒரே நாளில் 24.42 டன் கழிவுப் பொருள்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டுள்ள தூய்மை இயக்கம் மூலம் ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைந்துள்ள அனை... மேலும் பார்க்க

தாளவாடி அருகே ஊருக்குள் புகுந்த ஒற்றை யானை

தாளவாடி அருகே கும்பாரகண்டி கிராமத்துக்குள் வெள்ளிக்கிழமை புகுந்த ஒற்றை யானையை கிராம மக்கள் விரட்டியதால் மிரண்டு போன யானை மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் ஓடியது. சத்தியமங்கலத்தை அடுத்த தாளவாடி வனப் பகுதியி... மேலும் பார்க்க

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்து கரும்புப் பயிா்களை சேதப்படுத்திய யானைகள்

தாளவாடி அருகே தோட்டத்துக்குள் புகுந்த யானைகள் கரும்புப் பயிா்களை சேதப்படுத்தின. சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், தாளவாடி வனத்தில் யானைகள் அதிக அளவில் உள்ளன. உணவு, தண்ணீா் தேடி யானைகள் அடிக்கடி விவசாயத்... மேலும் பார்க்க