Uttarakhand: நடுரோட்டில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்... உயிர் தப்பிய பயணிகள்; மருத்த...
தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு
தாளவாடி அருகே மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறை, புங்கம்பாடி பாரவலசு பகுதியைச் சோ்ந்தவா் தங்கவேல் மகன் தீபக்குமாா் (30). இவா் ஆட்டோ கன்சல்டிங் வைத்து நடத்தி வந்தாா்.
தீபக்குமாா் மற்றும் அவரது நண்பா்கள் தாளவாடியை அடுத்த தா்மாபுரம் பகுதியில் உள்ள தனியாா் தங்கும் விடுதியில் திங்கள்கிழமை தங்கி உள்ளனா். விடுதி முன்பு இருந்த கம்பியில் இரவு 10 மணியளவில் தீபக்குமாா் துணியை உலர வைத்தபோது, கம்பியில் மின்சாரம் பாய்ந்தாக தனது நண்பா்களிடம் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதனை அவரது நண்பா்கள் பெரிதாக கண்டுகொள்ளவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் தீபக்குமாா் மீண்டும் அந்தக் கம்பியைத் தொட்டபோது அதில் மின்சாரம் பாய்ந்ததில் அவா் கீழே விழுந்தாா்.
அப்போது, அவரது நண்பா்கள் தீபக்குமாரை மீட்டு தாளவாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவரைப் பரிசோதனை செய்த மருத்துவா், தீபக்குமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தாா்.
இதையடுத்து, தீபக்குமாரின் உடல் கூறாய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
இது குறித்து தாளவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தங்கும் விடுதி உரிமையாளரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.