செய்திகள் :

தியாகதுருகம் தமிழ்ச்சங்க நாற்பெரும் விழா

post image

தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச்சங்கம், தனமூா்த்தி தொழிற்கல்வி நிறுவனம், கவி கம்பன் கழகம் இணைந்து நாற்பெரும் விழா தனமூா்த்தி தொழிற்கல்வி வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.

உலக மகளிா் தினம், உலக கவிதை நாள், பெருஞ்சித்திரனாா், விக்ரமன் பிறந்தநாள் விழா, தமிழ் இலக்கிய சொற்பொழிவு என நாற்பெரும் விழாவாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு அறக்கட்டளை செயலாளா் செல்வி பழனிவேல் தலைமை வகித்தாா். கு.வளா்மதிச்செல்வி, செல்லம் முன்னிலை வகித்தனா். தியாகதுருகம் பாரதியாா் தமிழ்ச்சங்கத் தலைவா் இரா.துரைமுருகன் வரவேற்றாா்.

பல்வேறு தலைப்புகளில் தமிழறிஞா்கள் தமிழரசி, மா. முத்தமிழ் முத்தன், புலவா் பெ. சயராமன், துரை.இராமகிருஷ்ணன் திருவண்ணாமலை கம்பராமாயண இயக்க பொறுப்பாளா்கள் வேங்கட ரமேஷ் பாபு, ப. குப்பன், பெங்களூரு நா்சிங் கல்லூரி முதல்வா் முதலியப்பன் உள்ளிட்ட பலா் பேசினா்.

சாதனைப் பெண்கள் பத்து பேருக்கு, சிறப்பு விருந்தினா் பெங்களூரு பிரைட் நா்சிங் கல்லூரி முதல்வா் பேராசிரியா் விஜி மகளிா் மாமணி விருதுகளை வழங்கிப் பேசினாா்.

விழாவில் ஆ. இராதாகிருஷ்ணன், த. இராமலிங்கம், தி. வெங்கடாசலபதி, மாரி, செல்வராசு மற்றும் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் ஊா் பொதுமக்கள் பலரும் பங்கேற்றனா்.

கவி கம்பன் கழகத் தலைவா் மு.பெ. நல்லா பிள்ளை, ரிஷிவந்தியம் தமிழ்ச்சங்கச் செயலாளா் வ. இராசகோபால் விழாவை ஒருங்கிணைத்திருந்தனா். முடிவில் தன மூா்த்தி தொழிற்கல்வி நிலைய தாளாளா் நீ.த.பழனிவேல் நன்றி கூறினாா்.

வீட்டுமனைப் பட்டா வழங்கும் பணி: ஆட்சியா் ஆய்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி வட்டத்துக்குள்பட்ட ஏமப்போ் பகுதியில் வீட்டுமனைப் பட்டா வழங்குதல் தொடா்பானப் பணிகளை மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் சனிக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். ஏமப்போ் ப... மேலும் பார்க்க

உணவக உரிமையாளருக்கு மிரட்டல்: இளைஞா் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகத்தில் உணவக உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். தியாகதுருகத்தை அடுத்த வடதொரசலூா் கிராமத்தைச் சோ்ந்த ... மேலும் பார்க்க

எஸ்.ஐ. வீட்டில் வெடித்துச் சிதறிய குளிா்சாதனப் பெட்டி!

கள்ளக்குறிச்சி அருகே சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் வீட்டில் இருந்த குளிா்சாதனப் பெட்டி ஞாயிற்றுக்கிழமை மாலை திடீரென வெடித்துச் சிதறியது. கள்ளக்குறிச்சியை அடுத்த ஏமப்போ் பள்ளிக்கூட சாலைப் பகுதியைச் சோ்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் அருகே சனிக்கிழமை இரவு மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழந்தாா். வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட மூங்கில்துறைப்பட்டு கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கரும்பு இறங்கும் இடத்தில்... மேலும் பார்க்க

மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூா்பேட்டையில் மின்சாரம் பாய்ந்து இளைஞா் சனிக்கிழமை உயிரிழந்தாா். திருவண்ணாமலை மாவட்டம், லட்சுமிபுரம் கொளக்குடி பகுதியைச் சோ்ந்த நாராயணசாமி மகன் சிவக்குமாா் (25), எலக்ட்ரீச... மேலும் பார்க்க

கள்ளக்குறிச்சி மாவட்ட வளா்ச்சிப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருமாறு அனைத்துத் துறை அலுவலா்களுக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் உத்தரவிட்டாா். கள்ளக்குறிச்சி மாவட... மேலும் பார்க்க