செய்திகள் :

திருச்செந்தூர் கோவில் தக்கார் பதவி நீக்கம்! - உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவின் பின்னணி என்ன?

post image

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் தக்காரை உடனடியாக பதவி நீக்கம் செய்து விட்டு புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க உத்தரவிட்டிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை.

முருகக் கடவுளின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். தையில் பூசம், பங்குனியில் உத்திரம், வைகாசியில் விசாகம், தவிர சூரசம்ஹாரம் ஆகியவை இந்த தலத்தின் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள்.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைச் சட்டத்தின் படி அறநிலையத் துறையின் கீழ் வரும் கோவில்களில் அறங்காவலர் குழு நியமிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை அது மாற்றியமைக்கப்பட வேண்டும்.

தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் அதிமுக ஆட்சி நடைபெற்ற போது சுமார் 11 ஆண்டுகள் அறங்காவலர் குழுக்களே அமைக்கப்படவில்லை.

S M A Gandhimathinathan

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தூத்துக்குடியைச் சேர்ந்த எழுத்தாளரும் தவெக-வில் சில மாதங்கள் இயங்கியவருமான எஸ்.எம்.ஏ. காந்திமதிநாதன் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கில் வந்த தீர்ப்பையடுத்து அருள்முருகன் என்பவர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.

ஆனால் பதவிக்காலம் முடிந்தும் அவரே பதவியில் தொடர்ந்து வந்த நிலையில் மீண்டும் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார் காந்திமதிநாதன். அந்த வழக்கில்தான் தற்போது அதிரடி தீர்ப்பை வழங்கியிருக்கிறது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை. இந்த வழக்கை விசாரித்தது, சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி.

இது குறித்து காந்திமதிநாதனிடம் பேசினோம்.

arul murugan with kanimozhi

''அறங்காலவர் குழு தலைவர் பதவிக்காலம் முடிஞ்சுடுச்சுன்னா புதிய குழுவை நியமிக்க வேண்டியதுதான் அறநிலையத்துறையின் கடமை. அதைச் செய்யாம தக்கார் பதவியை உருவாக்கி அந்தப் பதவியில் அருள் முருகனைத் தொடரச் செய்தாங்க. இது சட்டப்படி சரியானது இல்லைனுதான் வழக்கு போட்டேன்.

வழக்கு மாண்புமிகு தலைமை நீதிபதி முன் இன்னைக்கு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில் தக்கார் பதவியில் நியமிக்கப்பட்டவரை உடனடியாப் பதவி நீக்கம் செய்துவிட்டு நான்கு மாதத்துக்குள் புதிய அறங்காவலர் குழுவை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

அறநிலையத்துறை அப்படி நியமிக்கவில்லை என்றால் நீதிமன்றமே தலையிட்டு அறங்காவலர் குழுவை நியமிக்கும்னு அறிவிச்சிருக்காங்க நீதியரசர்'' என்றார் அவர்.

காஸா போர் நிறுத்தம்: ட்ரம்ப் மட்டுமே உரிமைகோர முடியுமா? - இந்த நாடுகளின் பங்களிப்பு பற்றி தெரியுமா?

காஸாவுக்கான அமைதித் திட்டம் என ட்ரம்ப் 20 அம்ச திட்டத்தைவகுத்து அறிவித்தார். பெரும்பாலும் இஸ்ரேலுக்கேசாதகமாக இருந்த அந்த ஒப்பந்தத்துக்கு ஹமாஸும், இஸ்ரேலும்ஒப்புக் கொண்டன. காஸாவில் தாக்குதல் நின்றது. இ... மேலும் பார்க்க

SP Velumani வழக்கு: ADMK - DMK ரகசிய டீலிங்? | GAZA Deal: பேசுபொருளான Meloni | TVK | Imperfect Show

* காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது!* `நீங்கள் அழகான பெண்' - மெலோனி குறித்து ட்ரம்ப் சொன்னது என்ன?* `இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றாக இருப்பீர்கள்தானே?' - ட்ரம்ப்* மீண்டும் ட்ரம்ப்பை நோபல் பரிச... மேலும் பார்க்க

`மிகவும் அழகாக இருக்கிறீர்கள்'- இத்தாலி பிரதமரிடம் சொன்ன ட்ரம்ப்; சமூக ஊடகங்களில் எழுந்த விவாதம்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அரசியல் பயணமாக இங்கிலாந்து சென்றிருந்தார். இத்தாலியில், பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின் கட்சியான பிரதர்ஸ் ஆஃப் இத்தாலி ஏற்பாடு செய்த அட்ரேஜு என்ற வலதுசாரி அரசியல் மாநாட்டில் கலந்... மேலும் பார்க்க

"ஃபாக்ஸ்கான் நிறுவனம் ரூ.15,000 கோடி முதலீடு செய்யவில்லை" - அன்புமணி குற்றச்சாட்டு; அமைச்சர் மறுப்பு

ஃபாக்ஸ்கான் (Foxconn) நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ. 15,000 கோடியில் முதலீடு செய்யவிருப்பதாகவும், இதன்மூலம் 14,000 வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தமிழக அரசு நேற்று அறிவித்திருந்தது.இது தொடர்பாக, தலைமைச... மேலும் பார்க்க