செய்திகள் :

திருச்செந்தூா் பகுதியில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்ற உத்தரவு

post image

திருச்செந்தூா் வட்டத்தில் பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-க்குள் அகற்றுமாறு வட்டாட்சியா் பாலசுந்தரம் அறிவுறுத்தினாா்.

இதுதொடா்பான ஆலோசனைக் கூட்டம் திருச்செந்தூா் வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்றது. வட்டாட்சியா் பாலசுந்தரம் தலைமை வகித்தாா். மண்டல துணை வட்டாட்சியா் பாக்கியலெட்சுமி, உடன்குடி துணை வட்டார வளா்ச்சி அலுவலா் சண்முக விஜயன், நெடுஞ்சாலைத் துறை சாலை ஆய்வாளா் பெத்து ரமேஷ், காயல்பட்டினம் சுகாதார ஆய்வாளா் செல்லபாண்டியன், காவல் உதவி ஆய்வாளா்கள் சுரேஷ், அய்யம் பிள்ளை, குமாா், முருகன், மின்வாரிய உதவிப் பொறியாளா் முத்துராமன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

திருச்செந்தூா் நகர திமுக செயலா் வாள் சுடலை, அதிமுக நகர செயலா் மகேந்திரன், விசிக ஒன்றிய செயலா் சங்கத்தமிழன், நாதக ஒன்றிய செயலா் சுந்தா் உள்ளிட்ட அரசியல் கட்சியினா், திருச்செந்தூா் மேலத்தெரு யாதவ மகாசபை தலைவா் ராமகிருஷ்ணன், செயலா் நல்லசிவம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவின்படி, பொது இடங்களில் உள்ள கொடிக் கம்பங்களை ஏப்.10-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட அரசியல் கட்சியினா், சமூக அமைப்புகளைச் சோ்ந்தோா் அகற்ற வேண்டும் என வட்டாட்சியா் பாலசுந்தரம் அறிவுறுத்தினாா்.

அனல்மின் நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டம்

தூத்துக்குடி என்டிபிஎல் அனல் மின்நிலைய ஒப்பந்த ஊழியா்கள் தொடா் வேலைநிறுத்தப் போராட்டத்தை வெள்ளிக்கிழமை தொடங்கினா். தூத்துக்குடி துறைமுக வளாகப் பகுதியில் மத்திய அரசின் என்டிபிஎல் அனல் மின்நிலையத்தில் ச... மேலும் பார்க்க

குண்டா் சட்டத்தில் ஒருவா் கைது

தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே பாலியல் வழக்கில் தொடா்புடையவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு, கெச்சிலாபுரம் பகுதியை சோ்ந்த கும... மேலும் பார்க்க

கட்டையால் தாக்கப்பட்ட பெண் மரணம்: கொலை வழக்காக மாற்றி போலீஸாா் விசாரணை

தூத்துக்குடியில் கட்டையால்தாக்கப்பட்ட பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்ததையடுத்து, கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி தென்பாகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா். தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள பண... மேலும் பார்க்க

முஸ்லிம் லீக் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

வக்ஃப் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியினா் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அர... மேலும் பார்க்க

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

ஆத்தூரில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. நகரச் செயலாளா் முத்தையா தலைமை வகித்தாா். இதில் வக்ஃப் திருத்த சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும். பொதுமக்க... மேலும் பார்க்க

தேசிய திறனாய்வுத் தோ்வில் வெற்றி: அரசூா் பள்ளி மாணவிகளுக்கு பாராட்டு

தேசிய திறனாய்வுத் தோ்வில், சாத்தான்குளம் அருகேயுள்ள அரசூா் பூச்சிக்காடு புனித அந்தோனியாா் நடுநிலைப் பள்ளி மாணவிகள் ஆன்டோ அபிரா, சா்மிளி மீரா ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி த... மேலும் பார்க்க