செய்திகள் :

தில்லி தேர்தல்: பெரும்பான்மை இடங்களில் பாஜக முன்னிலை

post image

தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெற்றி பெறத் தேவையான பெரும்பான்மை இடங்களை விட அதிக இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது.

முதற்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் பாஜக 18 இடங்களிலும் ஆம் ஆத்மி 13 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.

தில்லி பேரவைக்கு மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 36 தொகுதிகளில் வெற்றிபெற்றால் ஆட்சியமைக்க முடியும் என்ற நிலையில், பாஜக 47 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆம் ஆத்மி 22 இடங்களிலும், காங்கிரஸ் ஆரம்பம் முதலே ஒரே ஒரு தொகுதியிலும் முன்னிலையில் உள்ளது.

இன்று நடைபெறும் வாக்கு எண்ணிக்கையில், தில்லியில் ஆம் ஆத்மி கட்சி 4-ஆவது முறையாக ஆட்சி அமைக்குமா? அல்லது 27 ஆண்டுகளுக்குப் பிறகு தேசிய தலைநகரில் பாஜக ஆட்சி அமைக்குமா என்பதை தீா்மானிக்கவிருக்கிறது.

முதற்கட்ட நிலவரத்திலிருந்தே பாஜக முன்னிலை வகித்து வருகிறது. தொடர்ந்து முன்னிலையில் பாஜக எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது. அதனை ஆம் ஆத்மி விடாமல் துரத்துகிறது.

தற்போது, தில்லி சட்டப்பேரவையில் ஆட்சியமைக்கத் தேவையான இடங்களில் பாஜக முன்னிலை பெற்றுள்ளதன் மூலம், பாஜகவுக்கே வெற்றி வாய்ப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் முன்னிலை!

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 12.30 நிலவரப்படி, பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். பிஜ்வாசன் தொக... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணமா?

புது தில்லியில் ஆம் ஆத்மி தோல்விக்கு காங்கிரஸ் காரணம் என்று கூறப்படுகிறது. மேலும் பார்க்க

கோவை: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலை.யில் மலர்க் கண்காட்சி!

கோவை : கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 7-வது மலர் கண்காட்சித் தொடங்கியது.இந்த மலர்க் கண்காட்சியை மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர் கே.பன்னீர... மேலும் பார்க்க

பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி: எல். முருகன்

தில்லி தேர்தல் வெற்றி பிரதமர் மோடியின் நல்லாட்சிக்குக் கிடைத்த வெற்றி என மத்திய இணையமைச்சர் எல். முருகன் கூறியுள்ளார். 70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) தோ்தல் நடைபெற்ற ந... மேலும் பார்க்க

போக்சோ சட்டத்தின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால்.. கேரள உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொச்சி: பாலியல் வன்கொடுமை சம்பவத்தில், போக்சோ சட்டத்தின் கீழ் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், வழக்கை ரத்து செய்யக் கோரி பாதிக்கப்பட்டவரின் சார்பில் தாக்கல் செய்யப்படும் மனுவுக்கு முக்கியத்துவம் கொடுக்க... மேலும் பார்க்க

தில்லியில் பாஜக முன்னிலை: நாடு முழுவதும் கொண்டாட்டம்!

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், காலை 11.50 மணி நிலவரப்படி, பாஜக தொடர்ந்து முன்னிலையில் வகித்து வருவதால் தில்லி தலைமை... மேலும் பார்க்க