செய்திகள் :

பாதுகாப்புப் படையினர் மற்றும் நக்சல்களுக்கு இடையே துப்பாக்கிச் சூடு!

post image

ஒடிசாவின் பாலங்கீர் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் இடது சாரி நக்சல்களுக்கும் இடையில் பயங்கர துப்பாக்கிச் சூடு தாக்குதல்கள் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாலங்கீரின் கங்காமர்தன் குன்றுகளிலுள்ள வனப்பகுதியில் சுமார் 30 நக்சல்கள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் நேற்று (பிப்.7) அங்கு சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, ஆயுதப்படை காவலர்கள் தங்களது முகாமை நெருங்குவதை அறிந்த நக்சல்கள் அவர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். அதற்கு பாதுகாப்புப் படையினர் நேருக்கு நேர் பதில் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இதையும் படிக்க: பூனையின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க தடயவியல் சோதனை!

இதனைத் தொடர்ந்து, இருதரப்புக்கும் இடையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று வருவதாகவும் அதிகப்படியான பாதுகாப்புப் படை வீரர்கள் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாகவும் பாலங்கீர் காவல் துறை உயர் அதிகாரி ரிஷிகேஷ் கிலாரி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வடக்கு மலைத் தொடர் காவல் அதிகாரி ஹிமான்ஷு லால், கங்காமார்தன் மலைகளிலிருந்து நக்சல்கள் வெளியேற்றப்படும் வரை இதுபோன்ற நடவடிக்கைகள் தொடரும் எனக் கூறியுள்ளார்.

தில்லி முதல்வர் பர்வேஷ்?

புதுதில்லி: புதுதில்லி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ள பாஜக வேட்பாளர் பர்வேஷ் முதல்வராக வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர்.தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குககள் எண்ணப்பட்டு வர... மேலும் பார்க்க

மணிப்பூர்: துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பறிமுதல்!

மணிப்பூர் மாநிலம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் ஏராளமான துப்பாக்கிகள் மற்றும் வெடி குண்டுகள் பாதுகாப்புப் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.பிஷ்னுபூரின் அய்கீஜங் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நேற்று (... மேலும் பார்க்க

ரயிலில் பாலியல் துன்புறுத்தல்: கர்ப்பிணியின் கருவில் உள்ள குழந்தை உயிரிழப்பு!

வேலூர் அருகே ஓடும் ரயிலில் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான கர்ப்பிணியின் வயிற்றில் இருந்த கரு உயிரிழந்ததாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி... மேலும் பார்க்க

நியூயார்க்: இந்திய வம்சாவளி நபருக்கு 25 ஆண்டுகள் சிறை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தில் போதையில் தனது வாகனத்தை அதி வேகமாக ஓட்டி 2 மாணவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபருக்கு 25 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடந்த 2... மேலும் பார்க்க

நியூயார்க்கில் ரொனால்டோவின் 12 அடி உயர வென்கல சிலை!

அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்திலுள்ள டைம்ஸ் ஸ்கொயரில் கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோவின் 40வது பிறந்த நாளை முன்னிட்டு அவரது 12 அடி உயர வென்கல சிலை திறக்கப்பட்டுள்ளது.போர்த்துகல் நாட்டைச்... மேலும் பார்க்க

அம்மா மருந்தகங்கள் மூடப்படாது! - ஜெ. ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் முதல்வர் மருந்தகம் திறக்கப்படுவதால் அம்மா மருந்தகங்கள் எதுவும் ஒருபோதும் மூடப்படாது என கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் ஜெ. ராதாகிர... மேலும் பார்க்க