செய்திகள் :

`ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்' - டெல்லி தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலை கவிழ்த்த மதுபானக் கொள்கை!

post image

டெல்லி சட்டமன்ற தேர்தலில் 2015, 2025ம் ஆண்டுகளில் பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை தோற்கடித்து அடுத்தடுத்து அமோக வெற்றி பெற்றது ஆம் ஆத்மி கட்சி. ஆனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெறும் 24 தொகுதிகளில் மட்டும் வெற்றி பெற்று தோல்வியை சந்தித்துள்ளது. அதே சமயம் பா.ஜ.க 46 தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. கடந்த ஐந்து ஆண்டு ஆட்சியில் ஆம் ஆத்மி கட்சி பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற முடியாமல் திணறியது. ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்ற முயலும் போது அதற்கு பா.ஜ.க முட்டுக்கட்டை போடுவதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது. ஆம் ஆத்மி கட்சியின் நிறைவேற்றாத வாக்குறுதிகள், டெல்லி காற்று மாசு போன்றவை மக்கள் மத்தியில் ஆளும் கட்சிக்கு எதிராக வெறுப்பை ஏற்படுத்தியது.

நலத்திட்டங்களை செயல்படுத்த பா.ஜ.க தலைமையிலான மத்திய அரசு தடையாக இருப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டினாலும் அது வாக்குறுதிகளை செயல்படுத்தாமல் இருப்பதற்கு கூறப்படும் காரணங்களாகவே மக்கள் பார்த்தனர். அதேசமயம் பா.ஜ.கவின் இரட்டை எஞ்சின் அரசு பிரசாரம் மக்கள் மத்தியில் எடுபட்டது. அர்விந்த் கெஜ்ரிவால் முதல்வராக இருந்தபோது அவரது வீட்டை புதுப்பிக்க கோடிக்கணக்கில் செலவு செய்ததாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. மத்திய தணிக்கை ஆய்வு அறிக்கையில் முதல்வரின் இல்லத்தை புதுப்பிக்க 7.91 கோடி என்று மதிப்பிட்டு இருந்தது. ஆனால் 2020ம் ஆண்டு பணி ஆர்டர் வழங்கப்பட்டபோது அத்தொகை 8.62 கோடியாக அதிகரிக்கப்பட்டது. பொதுப்பணித்துறை இப்பணிகளை 2022ம் ஆண்டு முடித்தபோது ரூ.33.66 கோடி செலவானது என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இதனை பா.ஜ.க சீஷ் மஹால் என்று விமர்சித்தது. அதாவது அர்விந்த் கெஜ்ரிவால் தனது இல்லத்தை கோட்டை போன்று மாற்றியதாக குற்றம் சாட்டியது.

அதேசமயம் ஆ,ம் ஆத்மி கட்சி பிரதமர் நரேந்திர மோடி ஆடம்பரமாக வாழ்வதாக குற்றம் சாட்டியது. ஆனாலும் ஊழலற்ற ஆட்சியை வழங்குவதாக கூறிவிட்டு கோடிக்கணக்கில் செலவு செய்து சொந்த வீட்டை புதுப்பிப்பதாக பா.ஜ.க பிரசாரம் செய்தது மக்கள் மத்தியில் எடுபட ஆரம்பித்தது. அதற்கும் மேலாக ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு டெல்லியில் அமல்படுத்தப்பட்ட மதுபானக்கொள்கை முக்கிய காரணமாகும். இந்த மதுபானக்கொள்கை மூலம் டெல்லியை குடிகார நகரமாக ஆம் ஆத்மி கட்சி மாற்றிவிட்டதாக பா.ஜ.க குற்றம் சாட்டியது. புதிய கொள்கையின் படி ஒரு பாட்டில் வாங்கினால் மற்றொரு பாட்டில் இலவசம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இது பின்னர் ரத்து செய்யப்பட்டாலும், இக்கொள்கை மூலம் மது பானம் தயாரிப்பவர்களிடமும், வினியோகஸ்தர்களிடமும் ஆம் ஆத்மி கட்சி கோடிக்கணக்கில் பணம் வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்காக அக்கட்சியின் தலைவர்கள் மணீஷ் சிசோடியா, சஞ்சய் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அதன் பிறகு அர்விந்த் கெஜ்ரிவாலும் கைது செய்யப்பட்டார். ஊழலுக்கு எதிராக போராடி ஆட்சிக்கு வந்த ஆம் ஆத்மி கட்சி மீதே ஊழல் குற்றச்சாட்டு எழுந்திருப்பதை டெல்லி மக்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்ததாக கூறப்படுகிறது.

Delhi : 'மோடியின் தொலைநோக்குப் பார்வையை டெல்லிக்கு கொண்டு வருவோம்'- பர்வேஷ் வர்மா கூறியதென்ன?

புதுடெல்லி தொகுதியில் 3 முறை வென்ற முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இன்று அதிர்ச்சி தோல்வியடைந்தார். அவரை தோற்கடித்து புதுடெல்லி தொகுதியில் பாஜக வேட்பாளர் பர்வேஷ் வர்மா வெற்றி பெற்றிருக்கிறார்... மேலும் பார்க்க

Delhi: 'டெல்லியின் வளர்ச்சிகளை பாஜக உறுதி செய்யும்.!' - பிரதமர் மோடி நெகிழ்ச்சி

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பான்மை தொகுதிகளை வென்று ... மேலும் பார்க்க

Samsung: 'கலவரம் பண்றோம்னு சொல்லி சஸ்பெண்ட் பண்றாங்க!'- உள்ளிருப்பு போராட்டத்தில் சாம்சங் ஊழியர்கள்!

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் உள்ள சாம்சங் தொழிற்சாலையில் ஊழியர்கள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். இந்த முறை உள்ளிருப்புப் போராட்டத்தில் இறங்கியிருக்கின்றனர். சங்கம் அமைக்க போராடியவ... மேலும் பார்க்க

Delhi: `பாஜக-விற்கு வாழ்த்துகள்... மக்களின் முடிவை ஏற்றுக்கொள்கிறோம்!' - தோல்வி குறித்து கெஜ்ரிவால்

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது.இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 2 மணி நிலவரப்படி பாஜக 48... மேலும் பார்க்க

Delhi : 'பாஜக தலைநிமிர்கிறது; ஆம் ஆத்மி தலைகுனிகிறது; காங்கிரஸ்...'- ரைமிங்கில் தமிழிசை

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 4... மேலும் பார்க்க

Delhi : கெஜ்ரிவாலை தோற்கடித்த முன்னாள் முதல்வரின் மகன் - முதல்வர் ரேஸிலிருக்கும் பர்வேஷ் வர்மா யார்?

டெல்லியில் மொத்தமுள்ள 70 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்தது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது.இன்று மதியம் 1 மணி நிலவரப்படி பாஜக 47... மேலும் பார்க்க