செய்திகள் :

பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் முன்னிலை!

post image

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிற்பகல் 12.30 நிலவரப்படி, பிஜ்வாசன் தொகுதியில் கைலாஷ் கெலோட் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

பிஜ்வாசன் தொகுதியில் 40,750 வாக்குகளைப் பெற்று கைலாஷ் கெலோட் முன்னிலையிலும், அவருக்கு எதிராகப் போட்டியிட்ட ஆம் ஆத்மியை சேர்ந்த சுரேந்தர் பரத்வாஜ் 33,235 வாக்குகள் பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார். சுமார் 7,515 வாக்குகள் முன்னிலையில் பாஜகவின் கைலாஷ் கெலோட் முன்னிலை வகித்து வருகிறார்.

கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தில்லியில் ஆட்சி செய்து வரும் ஆம் ஆத்மி கட்சி, வாக்கு எண்ணிக்கையில் தொடர்ந்து பின்னடைவைச் சந்தித்து வருகிறது. ஒருவேளை அடுத்தடுத்த சுற்றுகளில் ஆம் ஆத்மி முன்னிலை பெற்றாலும் கூட, பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைக்குமா என்பது சந்தேகம். கடந்த இரண்டு தேர்தல்களின்போது பெற்ற வெற்றியைப் போல அது இருக்காது என்றும் கூறப்படுகிறது.

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த... மேலும் பார்க்க

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார். தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்வி: தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல்!

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பார்க்க

தில்லி கான்ட், கோண்ட்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி!

தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் வீரேந்தர் சிங் கடியன் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13 சுற... மேலும் பார்க்க

பிரதமர் மோடி, தில்லி மக்களுக்குக் கிடைத்த வெற்றி : கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கும் தில்லி மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று புது... மேலும் பார்க்க

தலைநகரில் பாஜக ஆட்சி முதல்வராகிறாரா பர்வேஷ்?

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜகவின் பர்வேஷ் சாயிப் சிங் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். 70 தொகுதிகள் கொண்... மேலும் பார்க்க