செய்திகள் :

தலைநகரில் பாஜக ஆட்சி முதல்வராகிறாரா பர்வேஷ்?

post image

தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வரும் நிலையில், பாஜகவின் பர்வேஷ் சாயிப் சிங் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார்.

70 தொகுதிகள் கொண்ட தில்லி சட்டப்பேரவைக்கு புதன்கிழமை (பிப். 5) நடைபெற்ற தோ்தலில் 60.54 சதவீதம் வாக்குகள் பதிவானது. பதிவான வாக்குகளை எண்ணும் பணி சனிக்கிழமை (பிப்.8) காலை 8 மணிக்குத் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், 1.30 மணி நிலவரப்படி பாஜக 28,238 வாக்குகள் பெற்றும், அரவிந்த் கேஜரிவல் 24,449 வாக்குகள் பெற்று பின்னடைவையும் சந்தித்துள்ளார். சுமார் 3,789 வாக்குகள் வித்தியாசத்தில் பர்வேஷ் முன்னிலை வகித்து வருகிறார்.

தேசிய தலைநகரில் 27 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக மீண்டும் ஆட்சியமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக ஆதரவாளர்கள் வாத்தியங்கள், தாளங்களுடன் நடனமாடி, கட்சிக் கொடிகளை அசைத்து, ஒரு பண்டிகை போன்ற சூழ்நிலையை உருவாக்கியுள்ளனர்.

பாஜகவின் தேர்தல் சின்னமான தாமரையின் கட்அவுட்களை உயர்த்தியும், ஒருவருக்கொருவர் காவி நிறப் பொடியைப் பூசிக் கொண்டு மகிழ்ச்சியான கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் ஆணையம் வெளியிட்ட சமீபத்திய தகவலின்படி, தில்லியின் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 48 தொகுதிகளில் பாஜக முன்னிலை வகித்துள்ளது. அதே நேரத்தில் ஆம் ஆத்மி 22 இடங்களில் மட்டுமே முன்னிலை வகித்துள்ளது.

தலைநகரில் பாஜக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ள நிலையில், பர்வேஷ் முதல்வராக மகுடம் சூடுவாரா என்று பாஜக தலைமையகம் விரைவில் முடிவு செய்யும் எனத் தெரிகிறது.

உ.பி. இடைத்தேர்தலில் வெற்றியை உறுதிசெய்த பாஜக!

உத்தரப் பிரதேசத்தில் மில்கிபூர் தொகுதி இடைத்தேர்தலில் பாஜக வேட்பாளர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார்.தில்லி பேரவைத் தேர்தல், தமிழ்நாட்டில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைதேர்த... மேலும் பார்க்க

மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர்: பிரியங்கா

தலைநகரில் உள்ள மக்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளதாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ரா சனிக்கிழமை தெரிவித்தார். தில்லியில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், வெற்றி தோல்வியைத் தேர்தல... மேலும் பார்க்க

ஆம் ஆத்மி தோல்வி: தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல்!

புது தில்லி: புது தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த நிலையில், ஆவணங்களைப் பாதுகாக்கும் வகையில், தில்லி தலைமைச் செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும் பார்க்க

தில்லி கான்ட், கோண்ட்லி தொகுதிகளில் ஆம் ஆத்மி வெற்றி!

தில்லி கான்ட் தொகுதியில் ஆம் ஆத்மியின் வீரேந்தர் சிங் கடியன் 2,029 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் 13 சுற... மேலும் பார்க்க

பிரதமர் மோடி, தில்லி மக்களுக்குக் கிடைத்த வெற்றி : கேஜரிவாலை வீழ்த்திய பர்வேஷ்

புது தில்லி: தில்லி சட்டப்பேரவைக்கு நடைபெற்ற தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருக்கிறது. இந்த வெற்றி பிரதமர் நரேந்திர மோடிக்கும் தில்லி மக்களுக்கும் கிடைத்த வெற்றி என்று புது... மேலும் பார்க்க

அதிஷி வெற்றி! கேஜரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி!

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், கல்காஜி தொகுதியில் தில்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர... மேலும் பார்க்க