பாம்பன் புதிய பாலத்தில் மீண்டும் ரயில், கப்பலை இயக்கி ஆய்வு - விரைவில் ரயில் சேவ...
அதிஷி வெற்றி! கேஜரிவால், மணீஷ் சிசோடியா தோல்வி!
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வரும் நிலையில், கல்காஜி தொகுதியில் தில்லி முதல்வர் அதிஷி வெற்றி பெற்றிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும் தில்லி முன்னாள் முதல்வருமான கேஜரிவால், புது தில்லி தொகுதியில் தோல்வியைத் தழுவினார். பாஜக வேட்பாளர் பர்வேஷ் வெர்மா வெற்றி பெற்றுள்ளார்.
ஜங்புரா தொகுதியில் பாஜக வேட்பாளர் தர்விந்தர் சிங் மர்வாவிடம், தில்லி முன்னாள் துணை முதல்வரும், ஆம் ஆத்மி வேட்பாளருமான மணீஷ் சிசோடியா தோல்வியடைந்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதிஷி வெற்றி
கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட தில்லி முதல்வர் அதிஷி 52,154 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெற்றி அறிவிப்பு வெளியாகவில்லை.
கல்காஜி தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் ரமேஷ் பிதுரி முன்னிலை வகித்து வந்த நிலையில் அவர் இறுதிக்கட்ட சுற்றுகளின்போது பின்னடைவை சந்தித்து தோல்வியடைந்துள்ளார்.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில், பாஜக 47 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 23 இடங்களிலும் முன்னிலையில் உள்ளது. பல தொகுதிகளில் இறுதிக்கட்டத்தில் வாக்கு எண்ணிக்கை இருப்பதால், விரைவில் முழு தேர்தல் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இத்தனை தொகுதிகளிலும் பாஜக முன்னிலையில் இருந்தாலும் கூட, வாக்கு வீதம் என்ற அளவில் ஆம் ஆத்மியை விட பாஜக 3 சதவீதம் மட்டுமே அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளது.
தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் தோல்வியடைந்திருப்பது, ஆம் ஆத்மிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.