செய்திகள் :

விருதுநகர்: மருத்துவர்கள் பற்றாக்குறை; சேவைக் குறைபாடு புகார்கள்... திடீர் விசிட் அடித்த ஆட்சியர்!

post image

விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் அரசு மகப்பேறு மருத்துவமனை பிரதான சாலையில் உள்ளது. அரசு மருத்துவமனையின் புறநோயாளிகள் மற்றும் உள்நோயாளிகள் பிரிவு சாத்தூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த இரண்டு மருத்துவமனைகளிலும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை உள்ளதென தொடர் புகார்கள் வந்தது. மேலும், அவசர காலத்தில் நோயாளிகளுக்கு உதவிடும் வகையில் ஆம்புலன்ஸ் வசதியோ, பாதுகாப்புக்கு இரவு காவலரும் கிடையாது.

பூட்டு

இதுதவிர பணியில் இருக்கும் மருத்துவர்களும் சரியான முறையில் சிகிச்சை அளிப்பதில்லை என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில், சாத்தூர் சென்ற விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன், சாத்தூர் பிரதான சாலையில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, அரசு மருத்துவமனை வாயில் பூட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து, அதிகாரிகள் வந்திருப்பதை அறிந்து மருத்துவமனையின் பூட்டை திறந்து வெளியே செவலியர்களிடம் மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மருத்துவமனை உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்ட ஆட்சியர், மருத்துவமனையில் இரவு நேரத்தில் மருத்துவர்களோ, காவலர்களோ ஏன் பணியில் இல்லை என கேட்டறிந்தார்.

நள்ளிரவில் ஆய்வு

தொடர்ந்து, மருத்துவமனை மருந்து இருப்பு விவரம், சிகிச்சை பெறும் நோயாளிகள், சுகாதாரம், அடிப்படை வசதிகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு நடத்திய ஆட்சியர், இரவு நேரத்தில் மருத்துவமனையில் மருத்துவர் பணியில் இல்லாதது குறித்து சாத்தூர் தலைமை மருத்துவர் மற்றும் செவிலியர்களிடம் விரிவான விசாரணை நடத்துமாறு அதககாரிகளுக்கு உத்தரவிட்டார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவையடுத்து, சாத்தூர் அரசு தலைமை மருத்துவர் முனிசாயிகேசன் மற்றும் மருத்துவர்கள் சுகாதாரத்துறையினர் நேற்று விசாரணை நடத்தினர்.

மயானத்தில் அடக்கம் செய்ய எதிர்ப்பு; சாலை மறியல்... ஸ்தம்பித்த ஸ்ரீவில்லிப்புத்தூர் - மதுரை சாலை

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ரைட்டன்பட்டி பகுதியில் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தநிலையில், இப்பகுதியை சேர்ந்த மரியசின்னம்மாள் (வயது 68) என்பவர்‌ உடல்நலக்குறைவால்... மேலும் பார்க்க

வெடிக்கும் `வர்த்தகப் போர்?’ - அமெரிக்க வரி விதிப்புக்கு சீனா கொடுத்த அதிரடி பதிலடி!

அமெரிக்கா vs சீனாசீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டும் பொருட்களுக்கு 10 சதவீத வரிவிதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபராக பதவியேற்ற டொனால்டு ட்ரம்ப் அறிவித்தார். இந்த உத்தரவு செவ்வாய்க்கிழமை (பிப்.4) க... மேலும் பார்க்க

``அம்பேத்கருக்கு பாரத ரத்னா வழங்காத காங்கிரஸ், என்னை ஜெய்பீம் சொல்லச் சொல்கிறது '' -பிரதமர் மோடி

இந்த ஆண்டுக்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ம் தேதி நடைபெற்றது.இந்த பட்ஜெட் வரவேற்பையும், விமர்சனங்களையும் பெற்று பெரும் பேசுபொருளாகியிருந்தது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், பட்ஜெட் ம... மேலும் பார்க்க

இந்தியர்களுக்கு கை விலங்கு: `சட்டப்படிதான் அமெரிக்கா நடந்தது, ஆனால்..' -ஜெய்சங்கர் சொல்வதென்ன?

அமெரிக்காவில் சட்டத்திற்கு புறம்பாக குடியேறிய 104 இந்தியர்களை முதல் கட்டமாக வெளியேற்றியுள்ளது அமெரிக்கா. அவர்கள் அமெரிக்காவின் சி17 ராணுவ விமானம் மூலம் பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் விமான நிலையத்திற்... மேலும் பார்க்க

``சட்டவிரோதமாகக் குடியேறிய ஏலியன்ஸ்..'' -இந்தியர்களின் கை கால்களில் விலங்கிட்டு அனுப்பிய அமெரிக்கா

டொனால்ட் டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற நாள்முதல், அமெரிக்காவில் ஏற்கெனவே சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அதிபரின் உத்தரவின்படி அமெரிக்க ராணுவம் வெளியேற்றிவருகிறது. அதன்படி, சட்டவிரோதமாக அமெரிக்க... மேலும் பார்க்க

திருப்பத்தூர்: சுட்டிக்காட்டிய ஜூ.வி; கழிவறையை சுத்தம் செய்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!

திருப்பத்தூரில் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் வந்து பார்வையிட்ட கழிவறை, மூன்றே மாதங்களில் மீண்டும் மோசமான நிலைக்குச் சென்றது.எவ்வித பராமரிப்புமின்றி மிக அசுத்தமான நிலையில் ‌தூய்மையற்று சுகாதார ... மேலும் பார்க்க