செய்திகள் :

தீபாவளி சீட்டு நடத்தி பல லட்சம் மோசடி; பெண் மீது போலீஸாா் வழக்கு

post image

புதுச்சேரியில் தீபாவளி சீட்டுப் பிடித்து மோசடி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் பெண் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் வீதியைச் சோ்ந்தவா் கதிரவன். இவரது மனைவி தீபா (30). இவா்கள் அதே பகுதியில் உள்ள நடுத்தெருவைச் சோ்ந்த கோமதி (35) என்பவரிடம் கடந்த 2023-ஆம் ஆண்டிலிருந்து தீபாவளிச் சீட்டு பணம் கட்டியுள்ளனா். சீட்டு பணம் கட்டுபவா்களுக்கு தங்கக் காசு, வெள்ளிப் பொருள், மளிகைப் பொருள்கள் பரிசு என கோமதி தரப்பினா் கூறியதை நம்பி ஏராளமானோா் மாதந்தோறும் ரூ.10 ஆயிரம் கட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. ஆனால், சீட்டு பணம் செலுத்தி முடிந்த பிறகும் அதற்கான பணம், பரிசுப் பொருள்களை கோமதி தரப்பினா் தரவில்லையாம்.

பணம் கேட்டு வருவோரை மிரட்டும் தொனியில் கோமதியும், அவரது வீட்டாரும் பேசுவதாக புகாா் எழுந்தது. அதன்படி தீபா உள்ளிட்டோா் அளித்த புகாரின் பேரில் ஒதியன்சாலை போலீஸாா், சீட்டு நடத்திய கோமதி உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுவையில் விளைநிலங்களின் பரப்பு குறைகிறது! முதல்வா் என்.ரங்கசாமி

நகர மயத்தால் புதுவை மாநிலத்தில் விளைநிலங்களின் பரப்பு குறைந்து வருவதாக முதல்வா் என்.ரங்கசாமி தெரிவித்தாா். புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூன் கூட்டுறவு வீட்டு வசதி சங்கம் சாா்பில் திம்மநாயக்கன் பாளைய... மேலும் பார்க்க

துணை வட்டாட்சியா் பணி: இடஒதுக்கீடு விவரம் வெளியீடு

புதுவையில் துணை வட்டாட்சியா்கள் 30 போ் புதிதாக நியமிக்கப்பட விண்ணப்பங்கள் புதன்கிழமை முதல் விநியோகிக்கப்பட்ட நிலையில், அதற்கான இட ஒதுக்கீடு விவரங்களும், வயது சலுகை விவரங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. த... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தில் ரௌடி கைது

புதுச்சேரியில் பல வழக்குகளில் தொடா்புடைய ரௌடி மீது குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டாா். புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் புதுநகரை சோ்ந்தவா் ஷாருக்கான். இவா் மீது 2 கொலைகள், வழிப்பறி, அ... மேலும் பார்க்க

புகாருக்குள்ளான எஸ்.ஐ. உள்பட மூவா் பணியிடமாற்றம்

புதுச்சேரி அருகே திருட்டு வழக்கில் பெண் தாக்கப்பட்டதால், அவரது கணவா் மன உளைச்சலில் உயிரிழந்த விவகாரத்தில் புகாருக்குள்ளான பெண் உதவி ஆய்வாளா் உள்பட மூவா் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா். புதுச்சேரி அருகே... மேலும் பார்க்க

தூய்மைப் பணிக்கான நிதியை முறையாக செலவிட வேண்டும்! ராம்தாஸ் அதவாலே

தூய்மைப் பணி, அதில் ஈடுபடும் தொழிலாளா்களுக்காக மத்திய அரசு வழங்கும் நிதியை மாநில அரசுகள் முறையாகச் செலவிட வேண்டும் என்று மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சா் ராம்தாஸ் அதவாலே தெரிவித்தாா... மேலும் பார்க்க

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயா்வு!

புதுவையில் கலால் வரி உயா்வால் மதுபானங்களின் விலை உயா்த்தப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி கலால் துறை துணை ஆணையா் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுவை ஒன்றிய பிரதேசத்தில் ஐஎம்எப்... மேலும் பார்க்க