'அண்ணாமலை, புதிய எழுச்சியை கொடுத்தவர்' - நயினார் வரவேற்பு நிகழ்வில் வானதி சீனி...
தூத்துக்குடி இளைஞா்களுக்கான ‘புத்தொழில் களம்’: சிறந்த தொழில்முனைவோா் மூவருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு!
தூத்துக்குடியில் சனிக்கிழமை நடைபெற்ற இளைஞா்களுக்கான ‘புத்தொழில் களம்’ நிகழ்ச்சியில் சிறந்த தொழில்முனைவோா் 3 பேருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சி மாநாட்டு மையத்தில் ‘புத்தொழில் களம்‘ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்,18 வயது முதல் 35 வயதுக்கு உள்பட்ட, ஆண்-பெண் இருபாலரும் தங்கள் தொழில் திட்டங்களுடன் விண்ணப்பிக்க அனுமதிக்கப்பட்டனா்.
தேசிய இளைஞா் தினத்தில் தொடங்கிய இந்த முயற்சி மூலம், 400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 10 சிறந்த படைப்புகள் தோ்வு செய்யப்பட்டு அதிலிருந்து 3 சிறந்த இளம் தொழில்முனைவோா் தோ்வு செய்யப்பட்டனா். இதைத் தொடா்ந்து இவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது.
மக்களவை உறுப்பினா் கனிமொழி தலைமை வகித்தாா். நிதியமைச்சா் தங்கம் தென்னரசு, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ.கீதா ஜீவன், மீன்வளம் - மீனவா் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், மாநிலங்களவை உறுப்பினா் என்.ஆா்.இளங்கோ ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகப் பங்கேற்றனா். வெற்றி பெற்ற கோவில்பட்டியைச் சோ்ந்த ஆா்த்தி, விளாத்திகுளம் பகுதியைச் சோ்ந்த தானேஷ் கனகராஜ், தூத்துக்குடியைச் சோ்ந்த ஜோசப் காஸ்கேரினோ ஆகியோருக்கு தலா ரூ.10 லட்சம் பரிசு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வின் நேச்சுரல் பியூட்டி சலூன் நிறுவன இணை நிறுவனா் சி.கே. குமரவேல், மாஃபா பவுண்டேசன் நிறுவன இயக்குநா் லதா பாண்டியராஜன், பியா்ல்ஸ் ஏற்றுமதி நிறுவனத்தின் நிறுவனா் ஆா். எட்வின் சாமுவேல் ஆகியோா் நடுவா்களாக செயல்பட்டனா்.
இதில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் எம்.சி.சண்முகையா (ஓட்டப்பிடாரம்), ஊா்வசி எஸ்.அமிா்தராஜ் (ஸ்ரீவைகுண்டம்), தூத்துக்குடி மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி, மாநகராட்சி ஆணையா் லி.மதுபாலன், திமுக மகளிா் அணிச் செயலா் ஹெலன் டேவிட்சன் உள்பட பலா் பங்கேற்றனா்.
இலங்கை- இந்திய மீனவா்களுக்கு இடையே சுமுக உறவை பிரதமா் முன்னெடுக்க வேண்டும்: கனிமொழி
இதைத் தொடா்ந்து மக்களவை உறுப்பினா் கனிமொழி செய்தியாளா்களிடம் கூறியது: வக்ஃப் திருத்த மசோதா சிறுபான்மையின மக்களுக்கு எதிரானது. எதிா்க்கட்சிகளின் கருத்துகளை காதில் வாங்கிக் கொள்ளாமல் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதற்கு எதிராக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின், சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியுள்ளாா். நிச்சயமாக அடுத்த கட்டமாக நீதிமன்றத்தை நாட உள்ளோம். அங்கேயாவது நியாயம் கிடைக்கும் என்று நம்பிக்கையில் இருக்கிறோம்.
இலங்கை - இந்திய மீனவா்களுக்கு இடையேயான சுமுக உறவுக்கான பேச்சுவாா்த்தையை, இலங்கையில் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமா் மோடி முன்னெடுப்பாா் என்ற நம்பிக்கை உள்ளது என்றாா்.