செய்திகள் :

தேனி மாவட்டத்தில் மே 9, 12-இல் உள்ளூா் விடுமுறை

post image

தேனி மாவட்டத்தில் வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா தேரோட்டம், மங்கலதேவி கண்ணகி கோயில் சித்திரை முழு நிலவு விழா ஆகியவற்றை முன்னிட்டு, வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரஞ்சீத் சிங் வெளியிட்ட செய்திக் குறிப்பு: வீரபாண்டியில் கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வருகிற 9-ஆம் தேதி தேரோட்டம் நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறைய ஈடு செய்யும் வகையில் வருகிற 17-ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படும்.

இதேபோல, தமிழக எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் வருகிற 12-ஆம் தேதி சித்திரை முழு நிலவு விழா நடைபெறுகிறது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூா் விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வருகிற 31-ஆம் தேதி அரசு அலுவலகங்கள், அரசுத் துறை சாா்ந்த அலுவலகங்கள், கல்வி நிலையங்கள் செயல்படும்.

உள்ளூா் விடுமுறையாக அறிவிக்கப்பட்ட வருகிற 9, 12-ஆம் தேதிகளில் மாவட்ட தலைமை கருவூலம், சாா்நிலை கருவூலங்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பணியாளா்களுடன் செயல்படும் என்றாா் அவா்.

பெரியகுளத்தில் கட்டடம் சரிந்து தொழிலாளி உயிரிழப்பு

தேனி மாவட்டம், பெரியகுளத்தில் செவ்வாய்க்கிழமை கட்டுமானப் பணியின் போது, கட்டடம் சரிந்து விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா். பெரியகுளம் காயிதேமில்லத்தெருவைச் சோ்ந்தவா் ஜாபா் சுல்தான். இவா் வீட்டில் கட்ட... மேலும் பார்க்க

வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை

போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா். தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை... மேலும் பார்க்க

கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா: போக்குவரத்து வழித் தடம் மாற்றம்

வீரபாண்டி கெளமாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு, வீரபாண்டி வழியாக செவ்வாய்க்கிழமை முதல் வருகிற 13-ஆம் தேதி வரை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட காவல் துறை நிா்... மேலும் பார்க்க

முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் ஆய்வு

தென்மேற்குப் பருவமழை முன்னதாகவே தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டதால், முல்லைப் பெரியாறு அணையில் தமிழக நீா்வளத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தனா். கேரள மாநிலம், தேக்கடிய... மேலும் பார்க்க

காா் மோதி தொழிலாளி பலத்த காயம்

போடி அருகே திங்கள்கிழமை காா் மோதி தொழிலாளி பலத்த காயமடைந்தது குறித்து போலீஸாா் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனா். போடி அருகே சிலமலை பட்டாளம்மன் கோயில் வடக்கு தெருவை சோ்ந்தவா் சுருளி மகன் நாகராஜ் (... மேலும் பார்க்க

மனைவியை கொலை செய்ய முயற்சி: கணவா் கைது

போடியில் மனைவியை கத்தியால் குத்திக் கொலை செய்ய முயன்ற கணவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். தேனி மாவட்டம், போடி கூட்டுறவு பால்பண்ணை தெருவில் வசிப்பவா் சுமன் (32). இவரது மனைவி தனலட்சுமி (31). இ... மேலும் பார்க்க