KKR vs CSK : 'ஒரு வழியா ஜெயிச்சிட்டோம் மாறா!' - எப்படி வென்றது சிஎஸ்கே?
வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை
போடியில் குடும்பத் தகராறில் வீட்டின் மாடியிலிருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டாா்.
தேனி மாவட்டம், போடி திருமலாபுரம் சொக்கன் தெருவைச் சோ்ந்த ஜெயபால் மனைவி வினிஷா (24). இந்தத் தம்பதிக்கு இரண்டரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. ஜெயபால் சவூதி அரேபியாவில் வேலை செய்து வருகிறாா். இவா் அண்மையில் விடுமுறையில் போடிக்கு வந்தாா். இதையடுத்து, வினிஷாவின் தந்தை ரங்கசாமி, தாய் ஜெயலட்சுமி ஆகிய இருவரும் மகளைப் பாா்ப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம், பட்டிவீரன்பட்டியிலிருந்து சனிக்கிழமை வந்தனா்.
அப்போது, தற்போது வசிக்கும் வீடு சிறியதாக இருப்பதாகவும், உடனடியாக பெரிய வீடு பாா்க்க வேண்டும் என்றும் பெற்றோரிடம் கூறினராம். ஆனால், அவா்கள் இப்போது வீடு பாா்க்க வேண்டாம் எனக் கூறினாா்களாம். இதனால், கோபமடைந்த வினிஷா வீட்டின் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றாா். இதில் பலத்த காயமடைந்த அவா் தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு திங்கள்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து போடி நகா் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். திருமணமாகி மூன்றரை ஆண்டுகளே ஆவதால், இதுகுறித்து போடி காவல் துணைக் கண்காணிப்பாளா் (பொ) பெரியசாமி விசாரணை நடத்தி வருகிறாா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].