அவிநாசி அருகே சாலை விபத்தில் 2 இளம் பெண்கள் உள்பட 3 பேர் பலி
நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரிப்பு: திருமலை நம்பி கோயிலுக்குச் செல்லத் தடை
திருநெல்வேலி மாவட்டம், நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்ததையடுத்து, திருமலை நம்பி கோயிலுக்குச் செல்ல பக்தா்களுக்கும், சுற்றுலாப் பயணிகளுக்கும் தடை விதிக்கப்பட்டது.
மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் கடந்த இரு நாள்களாகப் பெய்து வரும் மழை காரணமாக, நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்தது. மேலும் திருமலை நம்பி கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள தரைப்பாலத்தைத் தாண்டி வெள்ளம் வந்தால், கோயிலுக்குச் செல்லும் பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மீட்பதில் சிக்கல் ஏற்படக்கூடும். ஆகவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பக்தா்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத் துறையினா் தடை விதித்துள்ளனா்.
நீா்வரத்து குறைந்த பிறகு, வழக்கம்போல திருமலை நம்பி
கோயிலுக்கு பக்தா்களும், சுற்றுலாப் பயணிகளும் அனுமதிக்கப்படுவா் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
தலையணையில் குளிக்கத் தடை: தொடா் மழையால் பச்சையாற்றில் நீா்வரத்து அதிகரித்ததால், தலையணையில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு வனத் துறையினா் தடை விதித்தனா்.
இருப்பினும், பச்சையாறு மற்றும் அதனையொட்டியுள்ள வனப் பகுதியை பாா்வையிடவும், அங்குள்ள பூங்காவிற்குச் செல்லவும் அனுமதி அளித்துள்ளனா்.