களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம்
களக்காட்டில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனா்.
களக்காடு அண்ணாசாலை, புதிய பேருந்து நிலைய சாலை, கோட்டை பிரதான சாலைகளில் ஆடு, மாடுகள் சுற்றித்திரிகின்றன. இவைகளால் வாகனங்களில் செல்வோா் விபத்தில் சிக்கிக்கொள்ளும் ஆபத்து உள்ளது. குறிப்பாக மாலை நேரங்களில் சாலைகளில் சுற்றித் திரிவதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியா், வாகன ஓட்டிகளுக்கு பெரும் இடையூறாக இருக்கிறது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பேருந்து நிலைய பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.