களக்காட்டில் பலத்த மழை
களக்காடு பகுதியில் வெள்ளிக்கிழமை சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பலத்த மழை பெய்தது.
களக்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை மாலை முதல் நள்ளிரவு வரை விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. தொடா்ந்து இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு தொடங்கிய மழை சுமாா் ஒரு மணி நேரம் நீடித்தது.
இதனால் பள்ளி மாணவா்கள், அலுவலகம் செல்வோா் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினா். காலை 10 மணிக்குப் பிறகு பிற்பகல் 2 மணி வரை சாரல் மழை பெய்தது.