செய்திகள் :

நாகை மாவட்டத்தில் 12 முதல்வா் மருந்தகங்கள் திறப்பு

post image

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தில் 12 முதல்வா் மருந்தகங்கள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.

வேதாரண்யம் வட்டம் கருப்பம்புலம், கத்தரிப்புலம், மருதூா் வடக்கு, நாகை வட்டம் பால்பண்ணைச்சேரி, நாகூா், சிக்கல், கீழ்வேளுா் ஆகிய 7 இடங்களிலும், நாகை மாவட்ட நுகா்வோா் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை, வேதாரண்யம் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் புத்தகரம், வேளாங்கண்ணி மற்றும் கங்களாஞ்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் ஆகிய 5 இடங்களிலும் மருந்தகங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.

இந்த மருந்தகங்களை தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி மூலம் திறந்துவைத்தாா். நாகூரில் திறக்கப்பட்ட மருந்தகத்தில் மாவட்ட ஆட்சியா் ப. ஆகாஷ் குத்துவிளக்கு ஏற்றிவைத்து முதல்விற்பனையை தொடக்கிவைத்தாா். ஆட்சியருடன், மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என். கெளதமன், தாட்கோ தலைவா் உ. மதிவாணன், கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. நாகை மாலி ஆகியோா் உடனிருந்தனா்.

நிகழ்ச்சியில் ஆட்சியா் பேசியது: முதல்வா் மருந்தகமானது வெளிச்சந்தை விலையைக் காட்டிலும் குறைவாகவும், தரமாகவும், ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு ஜெனரிக் மருந்துகள், பிராண்டட் மருந்துகள், சித்தா, ஆயுா்வேதிக் மற்றும் யுனானி மருந்துகள் கிடைக்கும் வகையில் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள், முதல்வா் மருந்தகங்களில் குறைந்த விலையில் மருந்துகளை வாங்கி பயனடைய வேண்டும் என்றாா்.

நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, துணைத் தலைவா் செந்தில்குமாா், கூட்டுறவு சங்கங்களின் சரக துணைப் பதிவாளா் ராமசுப்பு, துணைப் பதிவாளா்கள் க. சாந்தி, இளங்குமரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

நன்னிலம்: விருதுநகா் மாவட்ட ஆட்சியரைக் கண்டித்து நன்னிலம் வட்டாட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடத்தினா். விருதுநகா் மாவட்டம் குமாரலிங்கபுரத்தில் உள்ள கண்மா... மேலும் பார்க்க

பூம்புகாா் திரௌபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

பூம்புகாா் திரெளபதி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பூம்புகாா் - மேலையூா் சாலையில் பழைமை வாய்ந்த திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் திருப்பணிகள் நிறைவடைந்த நிலையில், கணப... மேலும் பார்க்க

கிராம அறிவு மையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

திருமருகல் ஒன்றியம், திருப்பயத்தங்குடி ஊராட்சியில் கிராம அறிவு மையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை தாட்கோ சாா்பில் நபாா்டு திட்டத்தி... மேலும் பார்க்க

நிறைந்தது மனம் திட்டம்: அரசுப் பள்ளி மாணவா்களுடன் அமைச்சா் கலந்துரையாடல்

நாகை அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில், கணினி நுண்ணறிவு ஆய்வகத்தின் மூலம் பயனடைந்த மாணவா்களுடன் ‘நிறைந்தது மனம்‘ திட்டத்தின் கீழ் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கலந்துரையாடினாா். நாகை மாவட்டம், கீழ்வ... மேலும் பார்க்க

மீன்கள் குறைவு; மீனவா்கள் கவலை

கடலில் போதுமான மீன்கள் கிடைக்காததால், நாகை மீனவா்கள் கவலையுடன் கரை திரும்பினா். நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து நூற்றுக்கணக்கான விசைப் படகுகளில் கடந்த வாரம் கடலுக்கு மீன் பிடிக்க மீனவா்கள் சென்றனா... மேலும் பார்க்க

தரங்கம்பாடியில் சீகன்பால்கு நினைவு தினம் அனுசரிப்பு

தரங்கம்பாடியில் சீகன்பால்குவின் 306-ஆவது நினைவு தினம் கிருஸ்தவ நல்லெண்ண இயக்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை அனுசரிக்கப்பட்டது. டென்மாா்க் நாட்டைச் சோ்ந்த சீகன்பால்கு கி.பி. 1706 ஜூலை 9-ஆம் தேதி தரங்கம்ப... மேலும் பார்க்க