செய்திகள் :

நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கு இதுதான் காரணம்: லால்

post image

நடிகர் லால் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்தியதற்கான காரணத்தைக் கூறியுள்ளார்.

தமிழ், மலையாளம் மொழிகளில் பிரபல நடிகராக இருப்பவர் லால். இருமொழிகளிலும் 200-க்கும் மேற்பட்ட படங்களில் வில்லனாக, குணச்சித்தர நடிகராக நடித்து தனக்கென தனி அடையாளத்தைப் பெற்றவர்.

நடிகர் என்பதைத் தாண்டி லால் இயக்குநராகவும் அறியப்பட்டவர். 1984-ல் 'பப்பன் பிரியப்பட்ட பப்பன்' படத்தின் மூலம் எழுத்தாளராக சினிமாவுக்கு அறிமுகமான லால், மோகன்லால் நடிப்பில் மிகப்பெரிய வெற்றிபெற்ற ‘நாடோடிக்காத்து’ படத்தின் எழுத்தாளர் ஆவார்.

தொடர்ந்து, ராம்ஜி ராவ் ஸ்பீக்கிங், மனிச்சித்திரதாழு (சந்திரமுகி படத்தின் மூல வடிவம்) உள்ளிட்ட படங்களுக்கு இணை இயக்குநராக பணியாற்றியவர், 2 ஹரிஹர் நகர் படத்தின் மூலம் இயக்குநரானார்.

பின், கோஸ்ட் ஹவுஸ் இன், கிங் லையர் உள்ளிட்ட சில படங்களை இயக்கி ஓரளவு வெற்றிகரமான இயக்குநராகவும் மாறினார். இறுதியாக, 2021 ஆம் ஆண்டில் வெளியா சுனாமி படத்தில் இணை இயக்குநராக இருந்தார். அதன்பின், படங்களை இயக்கவில்லை.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லால், “ வயதாகும்போது மனிதர்கள் மாறுகிறார்கள். இதை, சிலர் புரிந்துகொள்வதில்லை. இறுதிவரை எடுத்ததையே எடுத்துக்கொண்டிருப்பார்கள். இந்த விஷயம் எனக்கு புரிந்ததும் நான் திரைப்படங்களை இயக்குவதை நிறுத்திவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: இதயம் நிறைந்தது... பறந்து போ படத்தைப் பாராட்டிய டூரிஸ்ட் ஃபேமிலி இயக்குநர்!

ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட புதிய பட போஸ்டர்!

இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் முதல்பக்கம் என்ற புதிய படத்தின் போஸ்டரை வெளியிட்டுள்ளார். சின்னதம்பி புரடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அனீஷ் அஷ்ரப் இயக்கத்தில் முதல்பக்கம் என்ற புதிய படம் உருவாகியுள்ளது. இந்தப் படத... மேலும் பார்க்க

தயாரிப்பாளராகும் எச். வினோத்!

இயக்குநர் எச். வினோத் தயாரிப்பாளராகக் களமிறங்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சதுரங்க வேட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி தீரன் படத்தால் பிரபலமடைந்தவர் எச். வினோத். அதனைத் தொடர்ந்து, நடிகர... மேலும் பார்க்க

ஜெயிலர் - 2 படப்பிடிப்பு அப்டேட்!

நடிகர் ரஜினிகாந்த்தின் ஜெயிலர் - 2 படப்பிடிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு ஜெயிலர் - 2 படப்பிடிப்பில் உள்ளார். கூலி திரைப்படம் ஆ... மேலும் பார்க்க

கனவு நனவானது..! ஹாலிவுட்டில் அறிமுகமாகும் வரலட்சுமி!

நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்முறையாக ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் போடா போடி (2012) படத்தில் சிம்புவுடன் வரலட்சுமி சரத்குமார் தனது முதல் படத்தில் நடித்தார். அதற்... மேலும் பார்க்க

ஆனந்த ராகம் தொடரில் இரட்டை வேடத்தில் களமிறங்கும் அனுஷா!

ஆனந்த ராகம் தொடரில் இரட்டை வேடத்தில் நடிகை அனுஷா நடிக்கவுள்ளார். இதுவரை ஒற்றை பாத்திரத்தில் நடித்து வந்த நிலையில், கிராமத்துப் பெண்ணாக மற்றொரு வேடத்தில் அனுஷா நடிக்கவுள்ளார். ஆனந்த ராகம் தொடரில் அடிதட... மேலும் பார்க்க

ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகும் அய்யனார் துணை சீரியல்!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் அய்யனார் துணை தொடர் ஞாயிற்றுக்கிழமையும் ஒளிபரப்பாகவுள்ளது. இந்தத் தொடரில் கதையின்படி சிறப்புக் காட்சியாக எடுக்கப்பட்டுள்ள பாகம் மட்டும் ஞாயிற்றுக்கிழமை மாலை 5 ம... மேலும் பார்க்க