செய்திகள் :

நிதீஷ் குமாரை மீண்டும் வெற்றிபெறச் செய்யுங்கள்: நிஷாந்த் குமார் வேண்டுகோள்!

post image

பிகார் முதல்வர் நிதீஷ் குமாரின் மகன் நிஷாந்த் குமார் வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் தனது தந்தைக்கு வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்

இதுதொடர்பாக நிஷாந்த் குமார் கூறுகையில்,

பிகார் முதல்வரும், தனது தந்தையுமான நிதீஷ் குமார் மாநிலத்தில் நிறைய வளர்ச்சிப் பணிகளைச் செய்திருப்பதால் பிகார் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். கடந்த தேர்தலில் மக்கள் 43 இடங்களில் வெற்றியை வழங்கினர். வளர்ச்சியின் வேகத்தைத் தொடர, தேர்தலில் அதிக இடங்களை வெல்வதைப் பொதுமக்கள் உறுதிசெய்ய வேண்டும்.

கடந்த 19 ஆண்டுகளில் முதல்வர் நிதீஷ் குமார் செய்துள்ள கொள்கைகளை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லுமாறு ஐக்கிய ஜனதா தளத் தொழிலாளர்களை நான் கேட்டுக்கொள்கிறேன். வரவிருக்கும் தேர்தலுக்கு (நிதிஷ் குமார்) முதல்வர் வேட்பாளர் என்பதைத் தேசிய ஜனநாயகக் கூட்டணி அறிவிக்க வேண்டும். அவரது தலைமையில் பிகாரில் மீண்டும் அரசு அமைக்கப்பட வேண்டும் என்று அவர் கூறினார்.

முன்னதாக இன்று காலை பிகார் தேர்தலில் தேசிய ஜனநாகக் கூட்டணி குறித்து பட்னாவில் அரசு விருந்தினர் இல்லத்தில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவும், முதல்வர் நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் இரு கட்சிகளைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகளும் கநலந்துகொண்டனர். பிகார் தேர்தலை எதிர்கொள்வது குறித்து முன்கூட்டியே தேர்தல் பணிகள் தொடர்பாக இருதரப்பினரும் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

பிகாரில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி பாஜகவுடன் கூட்டணி ஆட்சியில் உள்ளது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் 243 தொகுதிகளுக்கும் இந்தாண்டு இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. கடைசியாக 2020 அக்டோபர்-நவம்பரில் தேர்தல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினார் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர்!

பிரயாக்ராஜில் உள்ள திரிவேணி சங்கமத்தில் ஹிமாசல் முதல்வர் சுக்விந்தர் புனித நீராடினார்.உலகின் மிகப் பெரிய ஆன்மிக-கலாசார நிகழ்வாக கருதப்படும் மகா கும்பமேளா, பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி (புராண நத... மேலும் பார்க்க

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு!

ஆம் ஆத்மியின் மதுபான கொள்கையால் ரூ.2,002 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக புதியாக பதவியேற்றுள்ள தில்லி அரசு தெரிவித்துள்ளது.தில்லி முதல்வராக இருந்த அரவிந்த் கேஜரிவால், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஆ... மேலும் பார்க்க

பட்ஜெட்டில் அறிவித்த ரூ.5 லட்சம் கிரெடிட் கார்டு யாருக்கு? எப்படி விண்ணப்பிப்பது?

lசிறு, குறு தொழில் நிறுவனங்களை நடத்துவோருக்கு, அதிகபட்சமாக ரூ.5 லட்சம் வரை கடன் பெறும் வசதி கொண்ட கிரெடிட் கார்டு வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டில் அறிவித்திருந்தார்... மேலும் பார்க்க

பாஜக ஆட்சியில் இரட்டிப்பான அஸ்ஸாம் பொருளாதாரம்: பிரதமர் மோடி

பாஜக ஆட்சியில் அஸ்ஸாமின் பொருளாதாரம் இரட்டிப்பாக உயர்ந்துள்ளதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டை இன்று (பிப். 25) பிரதமர் நரேந்திர... மேலும் பார்க்க

119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் பிரபல கடையின் மாத வாடகை ரூ.3 கோடியா?

மும்பையில் 119 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் ஜாரா நிறுவனத்தின் மாத வாடகை சுமார் ரூ.3 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இது இணையத்தில் வைரலாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தெற்கு மும்பையின் கோட்... மேலும் பார்க்க

அஸ்ஸாமில் அம்பானி, அதானி ரூ.50,000 கோடி முதலீடு!

வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் ரூ.50,000 கோடி முதலீடு செய்யப்போவதாக தொழிலதிபர்கள் அதானியும் அம்பானியும் தெரிவித்துள்ளனர்.அஸ்ஸாம் தலைநகர் குவாஹட்டியில் ‘அஸ்ஸாம் உள்கட்டமைப்பு மற்றும் முதலீடு 2.0 மாநாடு’... மேலும் பார்க்க