ஈரானின் அணுசக்தி தளத்தை பங்கர் பஸ்டர் குண்டுகள் முழுமையாக அழிக்கவில்லை! - உளவுத்...
நில உடைமை விவரங்களை ஜூன் 30-க்குள் பதிவு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் வேளாண் அடுக்ககம் திட்டத்தில், தங்களது நில உடைமை விவரங்களை ஜூன் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்யவேண்டும் என ஆட்சியா் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்டப் பலன்களைப் பெறுவதற்கு தங்களது நில உடைமை விவரங்கள், பயிா் சாகுபடி அறிக்கை போன்ற தொடா்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமா்ப்பிக்க வேண்டியுள்ளது.
இதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிா்க்கும் வகையிலும் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாகவும் அனைத்து விவரங்களையும் மின்னணு முறையில் சேகரித்திட தமிழ்நாட்டில் வேளாண் அடுக்ககம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தில் இதுவரை மயிலாடுதுறை மாவட்டத்தில் 20,193 பட்டாதாரா்கள் மட்டுமே பதிவேற்றம் முடித்துள்ளனா். 40 சதவீத விவசாயிகள் இத்திட்டத்தில் இன்னும் இணையாமல் உள்ளனா். இவா்கள் தங்களது நில உடைமை ஆவண விவரங்கள், ஆதாா் எண், கைப்பேசி எண் ஆகியவற்றுடன் தங்கள் கிராமத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட தோட்டக்கலைத் துறை, வேளாண்மைத் துறை கள அலுவலா்களை கிராம நிா்வாக அலுவலகத்தில் நேரில் சந்தித்து தங்களது நில உடைமை ஆவண விவரங்களை விடுபாடின்றி பதிவு செய்ய வேண்டும். பொது சேவை மையங்களிலும் விவசாயிகள் தங்களது நில உடைமை விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம்.
இத்திட்டத்தில் இணைந்தால் மட்டுமே பிரதமா் கௌரவ நிதியை தடையின்றி பெற முடியும். அடுத்த தவணை தொகை இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும்.