செய்திகள் :

நெடுஞ்சாலைகளில் இனி எந்தக் கட்சி கூட்டத்துக்கும் அனுமதியில்லை: மதுரை கிளை

post image

மதுரை: தமிழகத்தில், இனி மாநில நெடுஞ்சாலைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் எந்தக் கட்சியும் கூட்டங்களை நடத்த அனுமதியில்லை என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவர் விஜய் நடத்திய மக்கள் சந்திப்பு பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான நிலையில், இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றபோது, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதி அளிக்கப்படுவதுகுறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த வழிகாட்டு விதிமுறைகள், நெறிமுறைகளை வகுப்பது குறித்து உயர்நிலைக் குழு அமைத்து விதிகளை வகுத்து வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைக் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து அதனை வெளியிட்டு, அரசாணை பிறப்பிக்கும் வரை, அரசியல் கட்சிகளுக்கு, நெடுஞ்சாலைகளில் கூட்டம் நடத்த அனுமதியில்லை என்று உத்தரவிட்டனர். ஏற்கனவே அனுமதி பெற்ற கூட்டங்களை நடத்திக் கொள்ள தடையில்லை.

மேலும், ஒவ்வொரு மாவட்டங்களிலும், அரசியல் கட்சிகள் கூட்டங்களை நடத்திக் கொள்ள என்று ஆட்சியர்களால் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் மட்டுமே அனுமதி வழங்கப்படலாம். அவ்வாறு கூட்டம் நடத்தப்படும் இடங்களிலும் அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

விசாரணை தொடங்கும் நிலையிலேயே, சிபிஐ விசாரணை கோர முடியாது என்றும், விசாரணையில் திருப்தி இல்லாவிட்டால்தான் சிபிஐ விசாரணை கோர முடியும் என்றும் கூறி நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்தனர்.

தொடர்ந்து, கரூர் நெரிசல் சம்பவத்தில் அதிக இழப்பீடு கோரிய வழக்குகளில் தவெக மற்றும் தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர்.

அக்.5-ல் நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கம்

நெல்லை, மதுரையில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் அக்.5ஆம் தேதி இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்டம் கூட்டம... மேலும் பார்க்க

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது?- இபிஎஸ்

கச்சத்தீவு பற்றி பேச முதல்வர் ஸ்டாலினுக்கு என்ன தகுதி இருக்கிறது? என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், முதல்வர் ஸ்டாலின் இராமநாதபுரம் மாவ... மேலும் பார்க்க

கைதாகிறாரா ஆனந்த்? முன்ஜாமீன் மனு தள்ளுபடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலர் புஸ்ஸி என். ஆனந்த்தின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.Is Anand being arrested? Anticipatory bail plea rejected! மேலும் பார்க்க

அக்.6-ல் காட்டாங்குளத்தூரில் இருந்து தாம்பரத்திற்கு சிறப்பு மின்சார ரயில்கள்

காலாண்டு விடுமுறை முடிந்து சென்னை திரும்புவோர் வசதிக்காக காட்டாங்குளத்தூரில் இருந்து சிறப்பு மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. ஆயுத பூஜை மற்றும் காலாண்டு விடுமுறைக்காக சென்னையில் இருந்து மக்கள், கூட்... மேலும் பார்க்க

விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது! - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது வருத்தமளிக்கிறது என சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் தெரிவித்துள்ளார்.கரூரில் விஜய் பிரசாரத்தின் போது 41 பேர் பலியான நிலையில... மேலும் பார்க்க

காலையில் குறைந்த தங்கம் விலை மாலையில் உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று காலை குறைந்த நிலையில் தற்போது ரூ.480 உயர்ந்துள்ளது. அதன்படி தங்கம் கிராமிற்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ.10,900க்கும் ஒரு சவரன் ரூ.87,200க்கும் விற்பனை செய்யப... மேலும் பார்க்க