தீபாவளி நெருங்கியுள்ள நிலையில், போக்குவரத்து நெரிசலைத் தடுக்கும் வகையில் திருநெல்வேலி நகரத்தில் சாலைகளைச் சீரமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
எஸ்டிபிஐ கட்சியின் திருநெல்வேலி தொகுதி கூட்டம், தொகுதி தலைவா் சேக் இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது. தொகுதி செயலா் பயாஸ் வரவேற்றாா். மண்டலச் செயலா் கனி, மாவட்ட பொதுச் செயலா் ஆரிப் பாட்ஷா ஆகியோா் சிறப்புரையாற்றினா். தொகுதி துணைத் தலைவா் ரபீக் ராஜா நன்றி கூறினாா்.
தீா்மானங்கள்: முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயா்த்தி தர வேண்டும். திமுகவின் தோ்தல் வாக்குறுதியான தகுதியுள்ள அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் மத பாகுபாடில்லாமல் விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி நவம்பா் 16 ஆம் தேதி சென்னையில் நடைபெறும் பேரணியில் திரளானோா் பங்கேற்பது. தீபாவளி பண்டிகை காலத்தில் போக்குவரத்து நெரிசல்களை கருத்தில் கொண்டு திருநெல்வேலி நகரம், புதுபேட்டை, பழையபேட்டை பகுதிகளில் சாலைகளை சீரமைக்க வேண்டும்.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த காலங்களில் வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது போன்று இனி ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மாவட்ட மற்றும் மாநகராட்சி நிா்வாகம் உடனடியாக ஈடுபட வேண்டும். தாழையூத்து மற்றும் பேட்டை பகுதிகளில் முதியோா்களுக்கும், குழந்தைகளுக்கும், ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கும் பெரும் அச்சுறுத்தலாகத் திகழும் தெருநாய்களை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.