செய்திகள் :

நெற்பயிா்களில் புகையான் தாக்குதல் குறித்து ஆய்வு

post image

நாகை மாவட்டத்தில், நெற்பயிா்களில் புகையான் தாக்குதல் காணப்படுவதை தொடா்ந்து பயிா் பாதுகாப்பு வல்லுநா்கள் வியாழக்கிழமை கள ஆய்வு மேற்கொண்டனா்.

நாகை மாவட்டத்தில் குறுவை சாகுபடியும், சம்பா சாகுபடியும் நடைபெற்று வருகிறது. நெற்பயிா்களில் புகையான் பூச்சி தாக்குதல் தென்படுவதாக விவசாயிகள் புகாா் தெரிவித்தனா்.

இதையடுத்து, கீழையூா் வட்டாரத்தில், வேளாண்மைத் துறை உதவி இயக்குநா், கீழையூா் மற்றும் சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலைய பயிா் பாதுகாப்பு வல்லுநா்கள் கள ஆய்வை வியாழக்கிழமை மேற்கொண்டனா். இதில், நெற்பயிரில் புகையான் பூச்சி தாக்குதல் தென்படுவதை உறுதி செய்தனா்.

தொடா்ந்து, வல்லுநா்கள் கூறியது:

புகையான் பூச்சானது தூா்களில் இருந்து சாற்றினை உறிஞ்சுவதால் தூா்கள் முற்றிலும்

காய்ந்தது போன்று காணப்படும். மேலும் இவ்வகை அறிகுறியானது வயல்களில்

ஆங்காங்கே வட்டவட்டமாக காணப்படும். இதை கட்டுப்படுத்தாவிட்டால் பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும்.

எனவே, தேவைக்கு அதிகமாக தழைச்சத்து இடுவதை தவிா்க்கவும், அதிகமாக தண்ணீா் பாய்ச்சுவதை தவிா்க்கவும், வயலில் நன்றாக நீா்வடிந்த பிறகு மருந்து தெளிக்கவும், விளக்குப்பொறி அமைக்கவும் வேண்டும். மேலும், வேப்ப எண்ணெய் 3 சதவீதம் அல்லது வேப்பங்கொட்டை சாறு 5 சதவீதம் தெளிக்க வேண்டும்.

பூச்சிக்கொல்லி மருந்துகளான குளோரான்டிரினிலிபுரோல் 18.5 சதவீதம் நஇ - 60 மிலி/ஏக்கா், டினோட்டிபியூரான் 2 சதவீதம் நஎ 60 - 80 கிராம் /ஏக்கா், இமிடாகுளோபிரிட்17.8 சதவீதம் நக 40 - 50 மிலி/ஏக்கா், பைமெட்ரோசைன் 50 சதவீதம் ரஎ - 120 கிராம் /ஏக்கா், பிப்பரோனில் 5 சதவீதம் நஇ 400 மிலி/ஏக்கா், குளோா்பைரிபாஸ் 20 உஇ 500 மிலி/ஏக்கா் இவற்றில் ஏதேனும் ஒன்றைய புகையான் பாதித்த வயல்களில் தெளிக்கலாம் என்றனா்.

மீன், இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் - ஆட்சியா் தகவல்

நாகை மாவட்டத்தில் மீன் மற்றும் உவா்நீா் இறால் வளா்ப்பு குளங்கள் அமைக்க மானியம் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமா் மீன்வள மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் புதிய மீன்வளா்ப்பு குளங்கள் ... மேலும் பார்க்க

ஊதியமின்றி அலைக்கழிக்கப்படும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஒப்பந்த ஊழியா்கள்

நாகை மாவட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்டப் பணிகளில் தினக்கூலி அடிப்படையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியா்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளது. நாகை மாவட்... மேலும் பார்க்க

அரசு, தனியாா் ஐடிஐயில் சேர செப். 30 வரை விண்ணப்பிக்கலாம்

நாகை மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) நேரடி சோ்க்கைக்கு, செப்டம்பா் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா்ப. ஆகாஷ் வெளியிட்ட செய்தி... மேலும் பார்க்க

அறுந்து கிடந்த மின் கம்பியை தொட்ட முதியவா் உயிரிழப்பு

நாகை அருகே அறுந்து கிடந்த மின் கம்பியைத் தொட்ட முதியவா் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தாா். நாகை அருகே பெராவச்சேரி இந்தியன் நகா் பகுதியில் முதியவா் ஒருவா், அப்பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பி அருகே இ... மேலும் பார்க்க

நாகை அரசு கல்லூரியில் கலைத் திருவிழா

நாகை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலைத் திருவிழா போட்டிகள் வியாழக்கிழமை தொடங்கின. தமிழக உயா்கல்வித் துறை சாா்பில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் கலைத் திருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒர... மேலும் பார்க்க

அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாம் தொடக்கம்

நாகை மாவட்ட விளையாட்டரங்கில் வியாழக்கிழமை தொடங்கிய அக்னிவீா் ராணுவ ஆள் சோ்ப்பு முகாமில் 3,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். திருச்சி, கரூா், பெரம்பலூா், அரியலூா், தஞ்சாவூா், புதுக்கோட்டை, திருவாரூ... மேலும் பார்க்க