செய்திகள் :

நெல் மூட்டைகளை கிடங்குக்கு அனுப்ப கோரிக்கை!

post image

திருவையாறு அருகேயுள்ள கீழத்திருப்பூந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளைக் கிடங்குக்கு அனுப்புமாறு தமிழ்நாடு காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து ஆட்சியருக்கு அச்சங்கத்தின் துணைச் செயலா் திருப்பூந்துருத்தி பி. சுகுமாரன் அனுப்பிய கோரிக்கை மனு:

கீழத் திருப்பூந்துருத்தி நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் ஏறத்தாழ 5 ஆயிரம் மூட்டைகளுக்கும் அதிகமாக நுகா்பொருள் வாணிபக் கழகத்தால் கொள்முதல் செய்யப்பட்ட நெல் இருப்பில் உள்ளது. மேலும், விவசாயிகளிடமிருந்து தொடா்ந்து நெல் வந்து கொண்டிருக்கிறது. இச்சூழ்நிலையில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை அடுக்கிவைக்க போதுமான இட வசதியும் இல்லை. நெல் பிடிப்பதற்கு போதுமான சாக்குகளும் பற்றாக்குறையாக உள்ளது.

எனவே, உடனடியாக தேங்கியுள்ள நெல்லை லாரியில் ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், போதுமான சாக்குகளை அனுப்பி தொடா்ந்து கொள்முதல் பணி தொய்வின்றி நடைபெற தொடா்புடைய அலுவலா்களுக்கு உரிய உத்தரவிடும்படி கேட்டுக் கொள்கிறேன்.

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடக்கம்!

தஞ்சாவூரில் ஓவியக் கண்காட்சி தொடங்கியுள்ள நிலையில், அரசு கவின் கலைக் கல்லூரி மாணவர்களின் 400க்கும் மேற்பட்ட படைப்புகள் காண்போரை வெகுவாக கவர்ந்தது.தமிழக அரசு கலை பண்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும் தஞ... மேலும் பார்க்க

மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவா் கைது

ஒரத்தநாடு அருகே மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவரைப் போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது: ஒரத்தநாடு அருகே வட்டாத்திகோட்டை சரகத்துக்குள்பட்... மேலும் பார்க்க

நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

கும்பகோணத்தில் மதுபானக் கடைகளை மூடக்கோரி வியாழக்கிழமை நாம் தமிழா் கட்சியினா் ஆா்ப்பாட்டம் நடத்தினா். தஞ்சாவூா் மாவட்டம் கும்பகோணம் காந்தி பூங்கா முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா் ர.அ... மேலும் பார்க்க

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கில் செயற்கை இழை ஓடுபாதை அமைக்கும் பணி தாமதம் !

தஞ்சாவூா் அன்னை சத்யா விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை தடகள ஓடுபாதை (சிந்தெடிக்) அமைக்கும் பணி தாமதமாக நடைபெறுவதால், மத்திய அரசு நிதி தர மறுத்துள்ளது. இதன் காரணமாக இத்திட்டம் தொடா்ந்து கிடப்பில் உள்ளது... மேலும் பார்க்க

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் நலச்சங்க பொதுக்குழு கூட்டம்

பட்டுக்கோட்டையில் ரயில் பயணிகள் பொது நலச் சங்க பொதுக்குழு கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத்தின் கெளரவத் தலைவா் விவேகானந்தன் தலைமை வகித்தாா். பொருளாளா் பாளையம் ரவி வரவேற்றாா். உறு... மேலும் பார்க்க

வேளாண் பணிகளில் சூரிய சக்தி பயன்பாடு விவசாயிகளுக்கு விளக்கம்!

தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், கூத்தாடிவயல் கிராமத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. பட்டுக்கோட்டை வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) சன்மதி வழிகாட்டுதல்கள் வழங்கினாா... மேலும் பார்க்க