செய்திகள் :

பங்குச் சந்தைகளில் கடும் சரிவு; ரூ.9 லட்சம் கோடி இழப்பு

post image

இந்தியப் பங்குச் சந்தைகளில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை முற்பகுதியில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.

உள்நாட்டு வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் மற்றும் நிப்டி-50 பங்குச் சந்தைகள் தலா ஒரு சதவீத சரிவைக் கண்டதாகவும், நடுத்தர மற்றும் சிறு நிறுவனப் பங்குகள் 3 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.

சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் 79,138 புள்ளிகள் வரை சரிவைக் கண்டது, நிஃப்டி 50 1.3 சதவீதம் சரிவடைந்து 24,074ல் வர்த்தகமானது.

மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதன மதிப்பு முந்தைய வர்த்தகத்தின்போது ரூ.444 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது ரூ.345 லட்சம் கோடியாக சரிந்தது. இதன் மூலம், இன்றைய ஒரு நாள் வர்த்தக இழப்பினால், முதலீட்டாளர்கள் ரூ.9 லட்மசம் கோடியை இழந்துள்ளனர்.

தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக, நிஃப்டி சரிவை சந்தித்து வருகிறது.

அமெரிக்க தேர்தல், சர்வதேச காரணிகள் போன்றவை இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்து சரிவுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

ரூ.5,000 கோடி திரட்டிய எஸ்பிஐ

கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் நாட்டின் மிகப் பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி ரூ.5,000 கோடி மூலதனம் திரட்டியுள்ளது.இது குறித்து வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:பாசல்-3 ... மேலும் பார்க்க

சென்னை எம்டிசி-க்கு 500 மின்சாரப் பேருந்துகள்: அசோக் லேலண்ட் ஒப்பந்தம்

சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகத்துக்கு மின்சாரத்தில் இயங்கக் கூடிய 500 பேருந்துகளை விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தை, ஹிந்துஜா குழுமத்தின் முதன்மை நிறுவனமான அசோக் லேலண்ட் பெற்றுள்ளது.இது குறித்து, ச... மேலும் பார்க்க

தள்ளாடிய சந்தையில் சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறைவு

நமது நிருபா் பங்குச்சந்தை 4-ஆவது நாளாக வியாழக்கிழமையும் எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச்சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்ட... மேலும் பார்க்க

55 சதவீதம் அதிகரித்த காபி ஏற்றுமதி

இந்திய காபிக்கான தேவை சா்வதேச அளவில் அதிகரித்து வருவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் நாட்டின் காபி ஏற்றுமதி 55 சதவீதம் அதிகரித்துள்ளது.இது குறித்து இந்திய காபி வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையி... மேலும் பார்க்க

4வது நாளாக சரிந்த பங்குச் சந்தை! நிஃப்டியில் கரோனாவுக்கு பிறகு பெரும் வீழ்ச்சி!

இந்திய பங்குச் சந்தை வணிகம் 4வது நாளாக இன்றும் (அக். 24) சரிவுடன் முடிந்தது. சென்செக்ஸ், நிஃப்டி சற்று சரிவுடனேயே முடிந்தது.நிஃப்டி 50-ல் அக்டோபர் மாதத்தில் மட்டும் 5% சரிவு ஏற்பட்டுள்ளது. இது கரோனா க... மேலும் பார்க்க

தங்கம் விலை சற்று குறைந்தது! இன்றைய நிலவரம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வியாழக்கிழமை காலை சவரனுக்கு ரூ. 440 குறைந்துள்ளது.கடந்த வாரம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ. 58,000-ஐ கடந்து புதிய உச்சத்தை தொட்டு, தொடர்ந்து விலை உயர்ந்து வந்ததால் நகை ப... மேலும் பார்க்க