Vijay TVK: `அரசியல் கட்சிகளும் அதன் முதல் மாநாடும்' - ஒரு விரிவான பார்வை
பங்குச் சந்தைகளில் கடும் சரிவு; ரூ.9 லட்சம் கோடி இழப்பு
இந்தியப் பங்குச் சந்தைகளில் வார இறுதி நாளான வெள்ளிக்கிழமை முற்பகுதியில் கடுமையான சரிவு ஏற்பட்டுள்ளது.
உள்நாட்டு வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் மற்றும் நிப்டி-50 பங்குச் சந்தைகள் தலா ஒரு சதவீத சரிவைக் கண்டதாகவும், நடுத்தர மற்றும் சிறு நிறுவனப் பங்குகள் 3 சதவீதம் வரை சரிவடைந்துள்ளன.
சென்செக்ஸ் 927 புள்ளிகள் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகத்தின்போது, சென்செக்ஸ் 79,138 புள்ளிகள் வரை சரிவைக் கண்டது, நிஃப்டி 50 1.3 சதவீதம் சரிவடைந்து 24,074ல் வர்த்தகமானது.
மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் ஒட்டுமொத்த மூலதன மதிப்பு முந்தைய வர்த்தகத்தின்போது ரூ.444 லட்சம் கோடியாக இருந்த நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது ரூ.345 லட்சம் கோடியாக சரிந்தது. இதன் மூலம், இன்றைய ஒரு நாள் வர்த்தக இழப்பினால், முதலீட்டாளர்கள் ரூ.9 லட்மசம் கோடியை இழந்துள்ளனர்.
தொடர்ந்து ஐந்தாவது வர்த்தக நாளாக, நிஃப்டி சரிவை சந்தித்து வருகிறது.
அமெரிக்க தேர்தல், சர்வதேச காரணிகள் போன்றவை இந்தியப் பங்குச் சந்தைகளில் எதிரொலித்து சரிவுக்குக் காரணமாக இருப்பதாகக் கூறப்படுகிறது.