செய்திகள் :

பசும்பொன்: ``துரோகத்தை வீழ்த்த ஒன்றிணைந்துள்ளோம்'' - ஓபிஎஸ், செங்கோட்டையனுடன் தினகரன் பேட்டி

post image

பார்வர்ட் பிளாக் கட்சியின் முக்கியத் தலைவரும், சுதந்திர போராட்ட வீரருமான பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 118 வது பிறந்த நாள் மற்றும் குருபூஜை விழா இன்று எழுச்சியாக நடந்து வருகிறது.

முதலைமைச்சர், மதுரை கோரிப்பாளையத்தில் மரியாதை

இவ்விழாவில் துணை குடியரசுத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும், பல்வேறு அமைப்பினரும் இன்று பசும்பொன் சென்று தேவர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக தனித்தனியாக செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம், செங்கோட்டையனுடன் சேர்ந்து பசும்பொன் சென்றது பரபரப்பை ஏற்படுத்த, பசும்பொன்னில் டிடிவி தினகரனுடன் இணைந்து அஞ்சலி செலுத்தியது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஓபிஎஸ்சுடன் செங்கோட்டையன்

பின்பு அங்கு செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "துரோகத்தை வீழ்த்த மூவரும் ஒன்றிணைந்துள்ளோம். மூவரும் இணைந்து தேர்தல் பணியாற்றுவோம். தென் தமிழ்நாட்டிற்கு விருந்தாளியாக செங்கோட்டையன் வந்துள்ளார்.

அம்மாவின் தொண்டர்களை ஒன்றினைக்க இணைந்துள்ளோம். எடப்பாடி பழனிசாமி மட்டும்தான் எங்கள் எதிரி, அவரைத்தவிர அதிமுகவிலுள்ள யாரும் எங்களுக்கு எதிரி அல்ல. எங்கள் அணியில் சசிகலாவும் விரைவில் இணைவார்" என்றார்.

ஓபிஎஸ் பேசும்போது, "கொங்கு நாட்டின் தங்கம் அண்ணன் செங்கோட்டையன். அனைவரையும் ஒன்றிணைக்க சபதம் எடுத்துள்ளோம். ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் அமைக்க இங்கு சபதம் எடுத்துள்ளோம். திமுக ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் வகையில் எங்கள் செயல்பாடு இருக்கும்" என்றார்.

ஓபிஎஸ்-செங்கோட்டையன்-டிடிவி

அருகில் நின்ற செங்கோட்டையன் எந்த கருத்தும் கூறவில்லை, டிடிவி, ஓபிஎஸ் கூறியதையும் மறுக்கவில்லை. பசும்பொன்னில் மூவரும் இணைந்து அஞ்சலி செலுத்தியதும், எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக பேசியதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Modi: "திமுக, காங்கிரஸ் பீகார் மக்களை அவமதிக்கிறது" - பீகாரில் பிரதமர் பேச்சு

பிரதமர் நரேந்திர மோடி கடந்த வியாழக்கிழமை (அக்டோபர் 30) இந்தியா கூட்டணி கட்சிகள் குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக பீகார் மக்களை அவமானப்படுத்துவதாக பேசி உள்ளார்.பீகார் மாநிலம் சக்கரா பகுதியில் நடந்த பா... மேலும் பார்க்க

'விஜய்யின் விருப்பம்; திமுகவின் நெருக்கடி; அதிமுகவோடு கூட்டணியில்லை!' - உறுதியாக கூறும் அருண் ராஜ்!

கரூர் சம்பவத்துக்கு பிறகு விஜய்யின் தவெக கட்சி மீண்டும் செயல்பட தொடங்கியிருக்கிறது. கட்சியின் அன்றாட செயல்பாடுகளை கவனிக்க 28 உறுப்பினர்களை கொண்ட குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. முக்கிய நிர்வாகிகள் ... மேலும் பார்க்க

`இவர்கள் திமுக பி டீம்' - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

இன்று (அக்.30) பசும்பொன்னில் நடைபெறும் தேவர் குரு பூஜையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் டிடிவி தினகரன் ஆகியோர் ... மேலும் பார்க்க

பசும்பொன்: தேவர் நினைவிட பூசாரி கன்னத்தில் அறைந்த ஸ்ரீதர் வாண்டையார்; தர்ணாவும் செய்ததால் பரபரப்பு

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நினைவிட பூசாரியை மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் கன்னத்தில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஶ்ரீதர் வாண்டையார்பார்வர்ட் பிளாக் கட்சி... மேலும் பார்க்க

வெற்றிகரமாக முடிந்த ட்ரம்ப் - ஜின்பிங் சந்திப்பு; என்னென்ன முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன?

உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில்... கடந்த ஏப்ரல் மாதம் 2-ம் தேதி தான், முதன்முதலாக ... மேலும் பார்க்க

SIR Row : `அதிமுக வரவேற்பதும், திமுக எதிர்ப்பதும் ஏன்?' - முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் | களம் 1

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)முன்னாள் அமைச்சர்கட்டுரையாளர்: முனைவர் வைகைச்... மேலும் பார்க்க