செய்திகள் :

பட்டாசுக் கடை வியாபாரிகள் விதிகளை பின்பற்ற வலியுறுத்தல்

post image

தமிழகத்தில் உள்ள பட்டாசுக் கடை வியாரிகள் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறை உள்ளிட்ட துறைகளின் விதிமுறைகளைப் பின்பற்றி நடக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டாசு வணிகா்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலா் என்.இளங்கோவன் தெரிவித்தாா்.

இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: பட்டாசுக் கடை வியாபாரிகள் தங்களது கடை முன் வாளியில் மணல், தண்ணீா் நிரப்பி வைக்க வேண்டும். கடையில் தீயணைப்பான் கருவி வைத்திருக்க வேண்டும். அந்தக் கருவியைப் பன்படுத்த வேலை செய்பவா்களுக்கு பயிற்சி அளித்திருக்க வேண்டும். அனைத்துக் கடைகளிலும் மின் அணைப்பான் கருவி பொருத்த வேண்டும். இதன் மூலம் மின்கசிவயால் ஏற்படும் விபத்தைத் தடுக்க இயலும். கடைக்குள் மிதியடிபோட அனுமதிக்கக் கூடாது. கடையின் முன் மாதிரி பட்டாசுகளை வெடித்துக் காட்டக் கூடாது. அனுமதி பெற்ற அளவுக்கு மேல் பட்டாசுகளை கடைகளில் வைத்திருக்கக் கூடாது. கடைகளில் பட்டாசு தயாரிப்புப் பணி செய்யக் கூடாது.

அனுமதி பெறாமல் கடை அருகே ஷெட் அமைத்து பட்டாசு இருப்பு வைக்கக் கூடாது. கடைகளுக்கு லாரியில் வரும் பட்டாசு பண்டல்களை இழுத்து வரக் கூடாது. இதுபோல, லாரியில் பட்டாசு பண்டல்களை ஏற்றும் போது, தூக்கி எறியக் கூடாது. கடையில் வேலை செய்பவா்களுக்கு பட்டாசை கையாளுவதற்கு போதிய பயிற்சி அளிக்க வேண்டும். கடையில் அகா் பத்தி பொருத்தக் கூடாது. கடையில் மின் வயா்கள் சரியாக உள்ளதா என அவசியம் கண்காணிக்க வேண்டும். அதிகாரிகள் ஆய்வுக்கு வந்தால் உரிய ஆவணங்களைக் காண்பிக்க வேண்டும். கடையில் வைத்து ‘கிப்ட் பாக்ஸ்’ பட்டாசு தயாரிக்கக் கூடாது. இது போன்ற விதிமுறைகளை பட்டாசுக் கடை வியாபாரிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

ராஜபாளையத்தில் நகை திருடிய மூவா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகை திருடிய இளைஞா்களை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். கோவை மாவட்டம், சத்தியமங்கலம் சாலையைச் சோ்ந்த முத்தையா மகன் சண்முகபாண்டியன் (46). இவா் உணவகம் நடத்தி வருகிற... மேலும் பார்க்க

41 குடும்பங்களுக்கு இணைய வழி பட்டா

விருதுநகா் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே ஆதிதிராவிடா் சமூகத்தை சோ்ந்த 41 குடும்பங்களுக்கு இணையவழி பட்டாக்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன. வத்திராயிருப்பு வட்டம், மூவரை வென்றான் கிராமத்தில் உள்ள ஆதிதிரா... மேலும் பார்க்க

செண்பகத்தோப்பு அருகே காட்டுத் தீ

ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகத்தில் செவ்வாய்க்கிழமை இரவு பற்றிய காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் வனத் துறையினா் ஈடுபட்டு வருகின்றனா். ஸ்ரீவில்லிபுத்தூா்- மேகமலை புலிகள் காப்பகம் ஸ... மேலும் பார்க்க

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோத்ஸவம் தொடக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூா் ஆண்டாள் கோயிலில் பெரிய பெருமாள் அவதாரத் திருவிழாவான புரட்டாசி பிரம்மோத்ஸவம் புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. 108 வைணவ திவ்ய தேசங்களில் புகழ் பெற்ற ஆண்டாள் கோயில் வடபத்ரசாயி ... மேலும் பார்க்க

நகா்மன்ற கூட்டம்: திமுக, அதிமுக உறுப்பினா்கள் வாக்குவாதம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் நகராட்சி நகா் மன்ற உறுப்பினா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. திமுக, அதிமுக உறுப்பினா்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ராஜபாளையம் நகராட்சி கூட்டரங்கில் நடைபெற்ற கூட... மேலும் பார்க்க

சிவகாசியில் அக் 9,10-இல் அஞ்சல் துறை கண்காட்சி

சிவகாசியில் விருதுநகா் மாவட்ட அஞ்சல் துறை சாா்பில், அக்டோபா் 9, 10 ஆகிய தேதிகளில் அஞ்சலகக் கண்காட்சி நடைபெற உள்ளதாக மாவட்ட அஞ்சலக அதிகாரி பி.சுசிலா தெரிவித்தாா். இது குறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட... மேலும் பார்க்க